அன்று... பயம் என்னை  நாத்திகத்தில் நம்பிக்கை இழக்கச் செய்து கோவில் கோவிலாக  திரிய வைத்த நாள். பக்கத்து வீட்டுக்காரர்களின் பார்வையில் நான் என்னவாக நிற்க போகிறேன் என்று தெரியப் போகும் நாள். என் 14 வருட கேள்வியான பள்ளிப்படிப்பிற்கு விடை கிடைக்கும் நாள்.என் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாள். 

'மதிப்பெண் எவ்வளவு ?' என்று கேள்வியுடனும் , அதை எப்படி பெற வேண்டும் என்பதற்கு மிகாத பயிற்சியுடன்  மட்டுமே  அன்றாடம் போராடி வந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தீர்ப்பு நாள். அதே பரபரப்பில் நானும்  திருவிளையாடல் படத்தில் முருகன் பாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை மிஞ்சிய விபூதி பட்டையுடன் என் அண்ணனின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்.

"என்னப்பா ரிசல்ட் பாக்கவா ?" என்று கேட்டார் நான் எப்போதும் பர்பி வாங்கித் திங்கும் பெட்டிக்கடை தாத்தா.

"ஆமா தாத்தா, அண்ணா வீட்ல கம்ப்யூட்டர் இருக்கு அங்க பாக்கலாம்னு" என்றேன் பயபக்தியுடன்.

"மார்க் கம்மினாலும் பரவாயில்ல. இங்க வந்துரு வீட்ல திட்டுனாங்கனா. மார்க் மட்டும் தான் வாழ்க்கையா என்ன ?" என்றார் 65 வயதிலும் கணீரென்று இருந்த குரலில்.

மார்க் கம்மி ஆயிரும்னு அபசகுணமா பேசறாரே என்று அழுவதா, எனக்கு அடைக்கலம் தரேன்னு சொல்றாரே என்று சிரிப்பதா என்று ஒரு குழப்பம். இருந்தும் தெளிவான ஓர் கருத்தை கூறிய மகிழ்ச்சியில் "சரி தாத்தா !"  என்று சிரித்து விட்டு நடக்க ஆரம்பித்தேன்.

லேப்டாப்பில் இணையத்தை இணைத்த மகிழ்ச்சியில் தன்னை ஒரு பில்கேட்ஸ் ஆக நினைத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தார் என் அண்ணன்.

"வாடா... அம்மா எங்க ?"

"கோயிலுக்கு போயிட்டு இங்க வரேன்னு சொன்னங்க ணா"

"சொல்லிருந்தா நானும் போயிருப்பேன்ல! இப்டி சொல்லாம போயிட்டாங்களே சித்தி வரட்டும் வெச்சுக்கறேன்" என்றார் 'சாமி' என எழுதினாலே கும்பிடும் பக்திமான் அண்ணன்.

'நீங்களும் போயிட்டா அப்புறம் யாரு ரிசல்ட் பாக்கறதாம்' என மனதில் நினைத்தவாறே "நீங்க பிஸியா இருப்பிங்கனு தான் கூப்டல ணா . ரிசல்ட் பாத்துட்டு வேணும்னா மறுபடியும் போலாம் "  என்றேன் அவரை மகிழ்விக்க, அதுவே சிறிது நேரத்தில் உண்மையும் ஆகிப் போனது.

"சரி, டைம் ஆயிடுச்சு. வா! ரிசல்ட் பாப்போம். ஏற்கனவே சைட் லோட் பண்ணி வெச்சுட்டேன். உன் ரெஜிஸ்டர் நம்பர் சொல்லு"

1,2,3 என்ற வரிசையையும் மறந்து நான் தூக்கத்திலும் சொல்லி கொண்டிருந்த அந்த வரிசை எண்ணைக் கூறினேன். அதை நிரப்பி என்ட்டர் பட்டனை தட்டிய அந்த விநாடி என் இதயம் பல்வேறு விஞ்ஞானிகளும் கண்டிராத வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது, இணைப்போ ஆமையுடன் போட்டி போட்டுக் கொண்டு லோட் ஆகிக் கொண்டிருந்தது.

சில நிமிட போராட்டத்திற்குப் பின், என் ரிசல்ட் திரையில் மின்னியது. நான் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். மகிழ்ச்சியில் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் துள்ளிக் கொண்டிருந்தேன். அதற்கும் அதிக கோவில்களை ஒரே நாளில் சென்ற சவாலை முடித்த அம்மா வருவதற்கும் சரியாய் இருந்தது. ஒரு முத்தத்துடன் சிறிது விபூதியும் சேர்த்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அம்மா.

அதன் பிறகு ஆரம்பித்தது தொலைப்பேசி அத்தியாயம். பந்தியில் பாயாசம் இல்லாமல் போனதால் பகைத்துக் கொண்டு போன மாமாவும், கடந்த தீபாவளிக்கு பலகாரம் கம்மியாய் கொடுத்ததால் விரக்தியில் இருந்த அத்தையும் இன்ன பிற தூரத்து சொந்தங்களும் அழைத்து மதிப்பெண்ணை அறிந்து கொண்டும், வாழ்த்திக் கொண்டும் இருந்தனர். அவரவர் பிள்ளைகளுக்கு அறிவுரைக் கூற ஓர் எடுத்துக்காட்டு கிடைத்துவிட்டதில் அவர்களுக்கு ஆனந்தம் தான். சிலர் இப்படி மார்க் எடுக்கணும் என்றும், சிலர் இத விட அதிகமா எடுக்கணும் என்றும் தமக்குரிய வசனங்களை தயார் செய்ய சென்றுவிட்டனர் என்னை வாழ்த்திய கையோடு.

இதற்கிடையில் என்னை அழைத்திருந்த என் ஆசிரியரின் வாயிலாக நான் தான் பள்ளியில் முதல் மதிப்பெண் என்றும் அறிந்து கொண்டேன்.  நான் என் நண்பர்களின் மதிப்பெண்களை பார்க்க ஆரம்பித்தேன். ஒருவனின் மதிப்பெண்ணைப் பார்த்த உடன் அவனுக்கு கைப்பேசியில் அழைத்தேன். அது என் உயிர் நண்பன் சம்பத்.

சம்பத் எங்கள் வகுப்பிலேயே மிகச் சிறந்த புத்திசாலி.எங்கள் அனைவரையும் விட அதிக மதிப்பெண் பெறும் திறமையுள்ளவனும் கூட. ஆனால், புத்திசாலித்தனத்திற்கும் மதிப்பெண்களுக்கும் தான் சம்மந்தம் இல்லையே. நல்ல மதிப்பெண் தான் எனினும் பலரை விட குறைவான மதிப்பெண்களையே எடுத்திருந்தான். அதற்கு அந்த வருடம் ஏற்பட்டிருந்த உடல் உபாதைகளும் காரணம் தான்.  இருந்தாலும் , எல்லா தகுதிகளும் உடையவனுக்கு அவன் நினைத்தது கிடைக்காத போது ஏற்படும் வலி அவனுக்கும் இருக்கும் தானே.

அவன் அம்மா போனை எடுத்தார்.

"வாழ்த்துக்கள் லோகேஸ்! நீ தான் ஸ்கூல் பர்ஸ்ட் னு கேள்விப்பட்டேன். சம்பத் வாங்கிருந்தா கூட இவ்ளோ சந்தோசப்பட்டிருக்க மாட்டேன்.  ரொம்ப சந்தோஷம் டா. வீட்டுக்கு வா ! " என்றார் என்றும் மாறாத புன்னகையுடன்.

"தேங்க்ஸ் மா, சம்பத் என்ன பண்ணிட்டிருக்கான் ?" என்றேன் அவர் கூறிய ஆசியில் கண்ணீர் ததும்ப.

"அவன் இருக்கான், இரு ! அப்பா பேசறாரு"

"டேய் லோகேஸ், சூப்பர் டா. நீ வருவன்னு எனக்கு நல்லா தெரியும். ரொம்ப சந்தோஷமா இருக்கு. வீட்ல எல்லாரும் என்ன சொன்னங்க?" என்றார் அவருடைய வழக்கமான 1௦௦௦ வாட்ஸ் வாய்சில்.

"தேங்க்ஸ் பா, எல்லாருக்கும் சந்தோஷம் தான். சம்பத் எங்க அவன்கூட நா பேசவே இல்ல"

"இரு அம்மாகிட்டயே தர்றேன் " என்றார். எனக்கோ மிகப் பெரிய குழப்பம் 'ஏன் அவன்கிட்ட போனே தரமாட்டேங்கிறாங்க' என்று.

"சொல்லு டா" என்றார் அவன் அம்மா.

"சம்பத் எங்கம்மா ?"

"அவனா அவன் அழுதுட்டு இருக்கான் டா" என்றார் முதன்முதலில் தன் குரலில் கவலையோடு.

"அம்மா, அவன் எடுத்துருக்கறது நல்ல மார்க் தான் மா.  எதுக்கு அழுதுட்டு இருக்கான். நீங்க திட்டி விட்டுட்டிங்களா ?"

"நாங்களும் இது நல்ல மார்க் தான்னு சொல்லி பாத்துட்டோம். அவனா உக்காந்து அழுதுட்ருக்கான். எங்க கூட பேசவும் மாட்டேங்கிறான்"

"அவன்கிட்ட போன் குடுங்க மா. நான் பேசறேன்"

"அவன் பேசுவானா னு தெரியலையே டா. இரு குடுத்து பாக்கறேன்"

"சம்பத், இந்தா லோகேஸ் பேசறான். பேசு டா. அவன்கிட்ட " என்று அவனிடம் சொல்லும் குரல் கேட்டது. பதிலுக்கு அவன் அழும் சத்தம் மட்டும் தான் கேட்டது. நான் அவனை நேரில் பார்த்து அவனுடன் இருக்க வேண்டிய சமயம் என்று புரிந்தது. அதற்கு முன் இருந்த விடுமுறையில் அவன் வீட்டில் நான் கழித்த நேரம் தான் அதிகம், அந்த நாட்களை விட அன்று நான் அவனுடன் இருப்பது தான் முக்கியம் என்பதை உணர்ந்தேன்.

அவன் அம்மாவிடம் நான் அவர்கள் வீட்டிற்கு நேரே வருவதாக கூறி போனை வைத்தேன். அதற்குள் எங்கள் வீட்டில் குல தெய்வ கோவிலுக்கு செல்ல தீர்மானித்துவிட்டனர். என் அண்ணனும் அம்மாவும் சேர்ந்து செய்த சதி வேலை தான் என்று புரிந்தது. அந்த சதிக்கு என் அப்பாவும் வீழ்ந்து விட்டார் என்றும் புரிந்தது. நானும் எதிர்த்து பேச முடியாத நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு சம்பத் வீட்டிற்கு செல்ல தீர்மானித்தேன்.

அதே போல் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் இறங்கி அவன் வீட்டிற்கு சென்றேன். அவன் அப்பா இல்லை. சமையற்கட்டில் அம்மா மட்டும் இருந்தார்.

என்னைப் பார்த்தவுடன் புன்னகை பூத்தவாறு "வாடா ஹீரோ ! எங்க ஸ்வீட் எல்லாம் ஒண்ணும் இல்லையா?" என்றார்.

"கண்டிப்பா வாங்கி தர்றேன் மா, சம்பத் எங்க? அவன பாக்கணும்" என்றேன்.

"அங்க கட்டில்ல தூங்கிட்டு இருக்கான் பாரு " 

கட்டிலில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று அவனை புரட்டிப் போட்டேன். அழுது வீங்கிய கண்களை திறந்து என்னைப் பார்த்தான்.

"டேய், ஏன் டா இப்டி பண்ணிட்ருக்க ? நீ வாங்கிருக்கறது நல்ல மார்க் தான் டா" என்றேன்.

உடனே அவன் கண்களில் நீர் பொல பொலவென்று ஊற்றெடுக்க ஆரம்பித்தது. "நான் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம் டா. எங்க வீட்ல ஏமாத்திட்டேன் டா " என்று அழ ஆரம்பித்தான்.

'ஐயையோ ! நான் தான் தேவ இல்லாம அவனுக்கு மறுபடியும் ஞாபகப்படுத்திட்டேனோ ' என்று என்னையே திட்டிக் கொண்டேன்.

அவனை சமாதானப் படுத்தும் போது உள்ளே அவன் அம்மாவின் குரல் கேட்டது. உறவினர் யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். "சம்பத், அவன் ப்ரெண்டு கூட பேசிட்டு இருக்கான். அவன் கூட இருக்கற பையன் தான் ஸ்கூல் பர்ஸ்ட். ரொம்ப நல்ல பையன். எங்களுக்கு அவனும் சம்பத் மாதிரி தான்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.

என்னென்னவோ சொல்லி அவன் அழுகையை நிறுத்துவதற்கும் அவன் அப்பா வருவதற்கும் சரியாய் இருந்தது. அதற்குள் சில நண்பர்களும் வந்துவிட்டனர்.  அவன் அப்பா கையில் ஒரு பாக்ஸ் இருந்தது.

"சம்பத், நீ அழுதது போதும். லோகேஸ் ஸ்கூல் பர்ஸ்ட் வந்துருக்கான் அத நாம கொண்டாட போறோம்" என்று கூறிக்கொண்டே உள்ளே இருந்து ஓர் கேக்கை  எடுத்து வெளியே வைத்தார்.

நண்பர்கள் அனைவரும் கேக் வைத்திருந்த டேபிளை சுற்றிக் கூடினர். சம்பத்தும் கண்ணைத் துடைத்துக் கொண்டு என் அருகில் வந்து நின்றான். நான் என் வீட்டில் இருப்பதாக உணர்ந்தேன்.

கேக் வெட்டுவதற்காக பிளாஸ்டிக் கத்தியை என் கையில் கொடுத்தார் சம்பத்தின் அப்பா. மகிழ்ச்சியில் கை நடுங்கியது.  அருகிலிருந்த சம்பத்தின் கையையும் என் கையோடு சேர்த்து வைத்து கேக்கை வெட்டினேன். அனைவரும் எனக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர், நான் சம்பத்திற்கு கேக் ஊட்டியதில் மகிழ்ச்சியடைந்தேன்.

அன்று நான் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை விட இன்றளவும் என் ஞாபகத்தில் இருப்பது இச்சம்பவம் தான். என் இத்தனை வருட வாழ்க்கை தேர்வில், இவ்வளவு அருமையான மனிதர்களை பெற்றதில் நான் 'பாஸ்'. இதுவே என் உண்மையான தேர்வு முடிவு.  

Dear Love,

I am writing this letter to you as an acknowledgement that I am feeling you everywhere and everyday. People often address you with the symbol 'Heart' but I suppose even heartless people have love for something. Actually your presence there makes them go heartless. Don't think I am complaining about your presence.  I am just trying to convey that you are very strong even in your uncomfortable zone which everyone of us are bad at.

I always have an eerie feeling that why should I love people who loves me. But you are just like a boomerang which always wanted to go back to their origin.  Yes, I do love traveling. But I cant travel like you tirelessly. You are seriously peripatetic that you walk, run, accelerate and get into even the deepest of the minds without any complexity. I appreciate you but don't embarrass humans like me by making the job of bringing out emotions look so easy. You are complexly simple and simply complex for sure.

This letter might make me look like a terrific flirt. But I don't mind flirting with love itself.

When people tend to define you, they always chose to keep you within the locked fingers of opposite sexes. Is that all elaborates you? Seriously, No. I can see you everywhere around me. May be I don't have any other work to do. But one thing is for sure. Even infinity is not good enough to define the metric of your existence.

I saw you in my mom's tears when I left for hostel,

I saw you in 100 rs note which my dad forced into my wallet even after my objection,

I saw you in my sister's half bitten chocolate,

I saw you in my grandma's bedtime stories,

I saw you in my friend's hand when it burdened my shoulder,

I saw you in my relative's advice who wants to make opinion about everything in my life,

I saw you in a stranger's smile when he adjusted himself to offer me a seat,

I saw you in my colleague's help when he filled the status on my behalf and many more...

People have a strong superstition about love that it exists only when the phrase 'I love you' is uttered. Thats where they are getting it wrong and fails to realize your existence. I realized you in many other phrases too.

'Did you eat well?'

'Reached home?'

'Don't go that way, traffic police is waiting'

'Take leave and get some rest'

'Shall we take a selfie?'

'Where should we go this summer?'

'I need you to come to my marriage 2 days before'

'You became too weak'

'I am trusting you'

'(BEEP) (BEEP) (BEEP)'

These are just few examples which I came across frequently. If I intend to state all the phrases, this letter will go down as a endless story which none would like to hear.

You are there in smile, tears, joy, pain, fear, anger, trust, disgust, anticipation, surprise and also in colors, music, books, letters, chocolates and anything that comes into existence. You never hesitate to show up and show off, be it with a stranger or acquaintance. You are mischievous at times but that doesn't make you bad.

I don't want to complain about you because it's us who continuously fail to realize you and thus concluding 'love' a bad word.

Nevertheless, you are a great companion who made me see this world from different perspective.

Be you and Keep myself being me.

Yours lovingly,
Me.
இரவு 7 :30 மணி  - பொள்ளாச்சி பேருந்து நிலையம்

பொதுவாகவே பயணம் செய்வதென்றால் துள்ளிக்குதிக்கும்  சத்யா , அன்று கனத்த இதயத்துடன் பிடிக்காத பயணத்திற்கு  அளவான மேக்கப்பில் பிரயத்தனமாகி டவுன் பஸ்ஸில் வந்திறங்கினாள்.  அவள் பெங்களுரு கிளம்ப வேண்டிய நேரம் அது , பி.டி. பீரியட் முடிந்து வகுப்பிற்குள் செல்லும் மனநிலையில் அவள். காரணம், அவள் அம்மா அப்பாவுடன் கழித்த அந்த இரண்டு நாட்கள். எந்நேரமும் பேசிக் கொல்லும் அவளை பிரிவதில் அவள் அம்மாவிற்கும் வருத்தம் தான்.  ஆனாலும், வொர்க் பிரம் ஹோம் தர மறுத்த அவள் ஆபீஸின் அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லை.

அவளை ஏற்றிச் செல்ல தயாராக இருந்த அந்த பேருந்தை பார்த்தாள் , ஆடி அசைந்து செல்வதில் அவளையே மிஞ்சிடும் கண்டிஷனில் இருந்தது. இருந்தும் அவள் தேடி பிடித்து பதிவு செய்த சீட் ஒரு ஜன்னலோர சீட் என்பது ஞாபகத்திற்கு வந்த போது லேசான மன நிம்மதி பிறந்தது. இளையராஜாவும் ஜன்னலோர காற்றும் செய்யும் காதலில் தன் கவலைகளை மறக்கலாம் என்ற ஆசையும் ஓர் காரணம். போய் உட்கார்ந்த உடனே காதுகளை ஹெட்செட்டில் கொடுத்து விட வேண்டுமென உறுதியுடன் பேருந்தினுள் ஏறினாள்.

தன் சீட்டிற்கு பக்கத்துக்கு சீட்டை ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த சக பயணியை பார்த்தாள்.

'என்ன குமுதா சிட்டிங் எல்லாம் ஸ்டைலா இருக்கு ?' என்று விஜய் சேதுபதி வாய்சில் பார்த்த உடனே கலாய்த்து விட வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. அந்த கும்மிருட்டிலும் கண்ணை பறிக்கும் அளவிற்கு மேக்கப்புடன் அமர்ந்திருந்தால் அந்த பெண். 'சரி, அவ எப்டி இருந்தா நமக்கு என்ன ?' என்று நினைத்துக் கொண்டு தன் சீட்டை ஆக்கிரமிக்க நெருங்கினாள் சத்யா.

குபீரென்று ஒரு வாடை அவளை தூக்கி வாரி போட்டது, ஸ்டைலான அந்த சக பயணியிடம் இருந்து தான் அந்த வாடை வந்தது. அரசின் மானிய விலை சேவையை பயன்படுத்தியதால் வரும் வாடையோ என்ற ஐயம் ஒரு நிமிடம் சத்யாவிற்கு உதித்தது. பிறகு அதை விட மோசமான ஒரு பெர்ப்யூமின் வாடை என்பதை உணர்ந்தாள்.

'சரி, உக்காந்து ஜன்னல தொறந்து விட்டா சரியாப் போகும் ' என்ற தைரியத்தில் சீட்டில் தன்னை அமர்த்திக் கொண்டாள்.  வாடையின் வலு சற்று கூடியது. இருந்தும் பொறுத்துக் கொண்டு, காதுகளை இளையராஜாவிடம் ஒப்படைத்தாள். பேருந்து கிளம்பியது.

ஒரு 10 கிமீ  கூட சென்றிருக்காது, சத்யாவின் தோள்பட்டையை அந்த சகபயணியின் கை சொறிந்தது. "எக்ஸ்க்யூஸ்  மீ , கொஞ்சம் குளிரா இருக்கு அந்த விண்டோவ க்ளோஸ் பண்றிங்களா ?"

'என்ன டா இது சத்யாவுக்கு வந்த சத்திய சோதனை, இத நம்பி தானே இவ பக்கத்துலயே உக்காந்தோம் ' என்று தனக்குள்ளே தலையில் அடித்துக் கொண்டாள்.  முடியாது என்று முரட்டுத்தனமாக சொல்லி விடலாமா என்று தோன்றிய யோசனையை உடனே உதறினாள். ஏனெனில், இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கும் குளிர ஆரம்பித்து விடும். அதன் பிறகு மூடினால் அது அவமானம் தான். அப்படி ஒரு தோல்வியை அவள் மனம் ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. பெரிய மனது பண்ணி ஜன்னலை மூடுவது போல் "ஸ்யூர் " என்று கெத்தாக சொல்லி ஜன்னலை இறக்கி விட்டாள்.

அது எவ்வளவு பெரிய தவறு என்று அவளுக்கு சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது. அந்த வாடை மீண்டும் அவளை தாக்க ஆரம்பித்தது. மூச்சடைத்தது. சட்டென தன்னை ஒரு ஆஸ்துமா நோயாளியாக உணர்ந்தாள். 'அப்பால போ சாத்தானே' என்று அந்த வாடையை துரத்த எண்ணினாள். ஆனால், அது போவதற்கு தான் வழி இல்லையே.

'சரி நாம போவோம் ' என்று எண்ணியவாறு  "எக்ஸ்க்யூஸ்  மீ,  உங்களுக்கு பிராப்ளம் இல்லேன்னா விண்டோ சீட் எடுத்துக்கரிங்களா ?" என்றாள் தன் சக பயணியிடம். இதற்கு முன் சத்யா செய்த உதவியை நினைவு கூர்ந்தாளோ என்னவோ உடனே சரி என்றாள். சீட்டுகள் மாற்றி ஆக்கிரமிக்கப்பட்டன.

இந்த சீட்டில் அமர்ந்தவுடன் அவள் இடப்புறம் இருந்த சீட்டை நோக்கியவாறு சாய்ந்து கொண்டாள் சத்யா. ஏதேதோ எண்ணங்கள் அவளை ஆட்கொண்டன, அதற்குமேல் இவளை சித்திரவதை செய்த இந்த வாடையும் சேர்ந்து அவள் கண்களில் நீரை வார்த்தன.  எதற்காக அழுதோம், எவ்வளவு நேரம் அழுதோம் என்று அறியாமல் தூங்கிப் போனாள் அவள்.

முழிப்பு வந்த போது அவளை 'பூவே செம்பூவே ' பாடல் அவளை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாக கண்களை திறந்தாள். அவள் தூங்கும் முன் வெறிச்சோடி இருந்த இடப்பக்கம் இருந்த சீட்டில்  இளைஞன் ஒருவன் உறங்கிக் கொண்டிருந்தான். மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மெலிதான லைட் வெளிச்சத்தில் அந்த இளைஞனை பார்த்தாள்.

அவளுக்கு மிகவும் பிடித்த வெள்ளை சட்டை அணிந்திருந்தான். அந்த இளைஞன் மாநிறம் தான் எனினும் வெள்ளை சட்டையும், மெல்லிய லைட் வெளிச்சமும் அவனை அழகிய தமிழ்மகன் பட்டத்திற்கு போட்டி போட வைத்துக் கொண்டிருந்தது சத்யாவின் மனது. தூங்கும் முன் அவளுக்கு இருந்த யோசனைகள் குடிபெயர்ந்து, வெள்ளை சட்டை அவளை ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தது. 'எனக்கு ஏன் வெள்ளை சட்டை னா இவ்ளோ புடிக்குது ? ஏன்னா என்னோட மனசும் வெள்ளை ஆச்சே ' என்று தனக்கு தானே மொக்கையைப் போட்டுக்கொண்டு, அதற்கு வெட்கமும் பட்டுக்கொண்டு அவனைப் பார்த்தவாறே சாய்ந்திருந்தாள்.

திடீரென்று பேருந்து ஒரு டோல்கேட்டில் நின்றது. சிலர் விழிக்க ஆரம்பித்ததில் சலசலப்பு ஏற்பட்டது. அதை கவனித்துவிட்டு  திரும்பிய சத்யாவிற்கு ஒரு அதிர்ச்சி. அந்த இளைஞன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு கிடுகிடுக்க ஆரம்பித்தது . டக்கென்று கண்களை மூடிக்கொண்டாள்.

வெட்கம் அவள் கன்னங்களை சிவக்கச் செய்தது, இதழ்களை புன்முறுவல் பூக்க செய்தது. கண்களை திறந்தும் திறக்காமல் அவன் பார்க்கிறானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் சற்றே கண்ணசந்தவுடன் கண்களை திறந்து பார்க்க ஆரம்பித்தாள். திடீரென்று அவன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். மீண்டும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். இதே போன்று மூன்று முறை நிகழ்ந்தது.

'அடியே சத்யா உனக்கு என்ன ஆச்சு? அவனுக்கு தான் நீ பாக்கறது தெரிஞ்சுருச்சே.. இன்னும் ஏன் பாத்துட்டு இருக்க..! வெக்கமா இல்ல ?' என்று அவளையே திட்டிக் கொண்டாள் சத்யா . 'அதனால என்ன எனக்கு புடிச்சுருக்கு நா பாக்கறேன்' என்று அந்த இளைஞன் மீது கொண்ட ஈர்ப்பினால் அவளே சமாளித்துக் கொண்டாள்.

'அவன் பேர் என்னவா இருக்கும் ? சக்தி, கௌதம், கார்த்தி , சிவா இந்த பேர்ல எதாவது ஒன்னா தான் இருக்கும் . ஏன்னா இதெல்லாம் தானே எனக்கு புடிச்ச பேரு ' என்று தனக்கு தானே அசடும் வழிந்து கொண்டாள் சத்யா.

அதே சமயம் அந்த இளைஞனின் மனம் வேறொரு உலகில் பறந்து கொண்டிருந்தது. எதார்த்தமாக அவன் கண் திறந்த போது மங்கலான வெளிச்சத்தில் அவன் பார்த்தது ஒரு  பெண்.  தூக்கத்திலும் ஒரு ஏக்கமான முகத்துடன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக் கொண்டிருந்தவளை அவனுக்கு உடனே பிடித்து விட்டது. பெண்களைப் பிடித்தாலும் அதை சொல்வதற்கோ, வெளிபடுத்துவதற்கோ எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் தயக்கம் அவனுக்கும் வந்தது. அதற்கு காரணம், பலரால் பெண்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பின்மை தான். அவன் அவளைப் பார்த்து சிரிக்க முயன்றால் கூட அது அவனுக்கு சூனியமாகி விட வாய்ப்புண்டு.

பேருந்து ஒரு டோல்கேட்டில் நின்ற போது, அவளும் அவனைப் பார்ப்பதை உணர்ந்து அவன் உள்ளம் பூரித்தது. மனதிற்குள் பல ஆயிரம் முறை சிரித்துக் கொண்டான். ஆண்களின் நாணம் பற்றி கதைகளில் மட்டுமே பார்த்தவனுக்கு, அவனுள் பார்ப்பது ஒரு புது வித அனுபவத்தை தந்தது. 'நம்மளையும் ஒரு பொண்ணு பாக்கறா, இத நாளைக்கு போய் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி கெத்து போடணும்' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான். ஆனாலும் அவள் மீது ஏனோ ஒரு மரியாதை அவனுக்கு உதயமாகியிருந்தது.  எண்ணங்களை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிவிடாத பெண்களினூடே இவள் கண்டிப்பாய் ஒரு வித்தியாசமான பெண்ணாய் தான் இருக்க வேண்டும்.  தூக்கத்தால் சோர்ந்து போயிருந்த  கோழி முட்டைப் போன்ற அவள் கண்கள் அவனை ஏதோ செய்தது.

அதன் பிறகு இருவரையும் தூக்கம் தூக்கிச் செல்ல மறுத்தது. விடியும் வரை முடியாப் பயணமாய் அவர்கள் பார்வை பார்ப்பதும், நிற்பதுமாய் பயணித்துக் கொண்டிருந்தன. ஒரு முடிவில்லா பயணத்தை விரும்பி எதிர்பார்த்தவர்களாய் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக சத்யா இறங்கும் இடம் வந்தது. பொள்ளாச்சியில் பேருந்தில் ஏறும்போது இருந்தததை விட மனம் கனத்திருந்தது.  அவன் எங்கே இறங்க போகிறான் என்று தெரியாது, அவளால் மறுபடியும் சந்திக்க முடியுமா என்று தெரியாது , அப்படியே சந்தித்தாலும் அவன் தனக்கு பொருத்தமானவனாய் இருப்பானா என்று தெரியாது. இப்படி பல பதில் தெரியாத கேள்விகளினூடே  அவனை பிரிவது அவளுக்கு சோகத்தை தந்தது.

சோகத்தோடு படிக்கட்டின் அருகில் நின்றுகொண்டு அவனை திரும்பி பார்த்தாள்.  அவனும் எதிர்பார்த்த மாதிரியே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவள் பார்த்த உடன் மெலிதான புன்னகையை தன் இதழில் தவழவிட்டான்.  சத்யாவிற்கு பல்பு எரிய ஆரம்பித்தது. 1000 வாட்ஸ் பவரோடு தன் புன்னகையை படரவிட்டாள்.

"டேய்.. வெள்ள சொக்கா உன்ன எங்க இருந்தாலும் கண்டுபுடிக்கறேன் டா ! உன் பேர் என்னனு எனக்கு தெரிஞ்சே ஆகணும்" என்று சபதமிட்டுக் கொண்டே பேருந்தில் இருந்து இறங்கினாள் சத்யா.

அதே சமயம் பேருந்தினுள் அந்த இளைஞனை கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பார்த்த போது 'அம்மா' என்று அலறியது அது. ஆன் செய்து காதில் வைத்து "அம்மா" என்றான்.

"டேய் கார்த்தி... ரீச் ஆயிட்டியா ?" என்றது அவன் அம்மாவின் குரல்.

பெசன்ட் நகர் பீச்  - மாலை 6.30  மணி

கடலை விற்பவரும் கடலைப் போடுவதை கடமையாய் கொண்டிருக்க, அதை வெறிக்க பார்த்துக் கொண்டு சில கூட்டம் அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. அதில் நாங்களும் ஒன்றாக ஒன்றிப் போயிருந்தோம். சென்னைக்கு எங்களின் முதல் விஜயம் என்பதை எங்கள் முகத்தைப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவிற்கு வாயைத் திறந்து சிலாகித்துக் கொண்டிருந்தோம்.

வழக்கமாக சிங்கிள் என சொல்லிக் கொள்ளும் மொட்டை பையன்கள் வாங்கி உண்ணும் அதிகம் செலவாகாத பண்டங்களை வாங்கிக் கொறித்துக் கொண்டே சுற்றி வந்து கொண்டிருந்தோம். பீச் என்றால் கடல் அலை மட்டுமே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, காதல் அலையை பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி தான்.

குடைக்குள் மழையைக் கூட பார்த்துவிட்ட எனக்கு, குடைக்குள் குழைந்து கொண்டிருந்த ஒரு ஜோடியை பார்த்தவுடன் பீறிட்டு வந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள எங்களுள் சென்னைவாசியான அரவிந்தை நோண்டினேன்.

"என்ன மச்சான், மழையும் இல்ல வெயிலும் இல்ல இங்க ஒருத்தன் கொட புடிச்சுட்டு உக்காந்துருக்கான் ?"

"அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கூட கொட புடிப்பானு கேள்விபட்டதில்ல ? அதான் இங்க புடிச்சுட்டே வாழ்ந்துட்டு இருக்கான்" என்றான் அரவிந்த் தனக்கே உண்டான கவித்துவமான கண்றாவி நகைச்சுவையோடு.

"இருந்தாலும்...." என்று மேலும் ஒரு சந்தேகத்தை கேட்க சென்ற என்னை தடுத்து, "போதும் மச்சான் மூடிட்டு வா!" என்றான் அரவிந்த்.

"அவங்க ஏற்கனவே மூடி தான் வெச்சுருக்காங்க டா" என்றேன் அவனை வம்பிழுக்க.

"அவங்களுத சொல்லல மச்சான், உன்னோடத சொன்னேன் "

"ரைட்டு...!" . இதற்கு மேல் அவனிடம் பேச்சுக் கொடுத்தால் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வேன் என்று விக்டரிடம் சென்றேன்.

"ஆர்த்தி அன்னைக்கு யெல்லோ டிரஸ் ல வந்தா பாரு. பப்பா ! என்ன அழகு டா சாமி !" என்று பிரவீனிடம் விவரித்துக் கொண்டிருந்தான். அவனும் எப்பவும் போல் எதிர்த்து பேசாமல் ஹூம் போட்டுக் கொண்டிருந்தான்.

ஆர்த்தி , எங்கள் வகுப்புப் பெண்ணாய் இருந்தும் அவளிடம் நாங்கள் யாரும் அவ்வளவாக பேசியதில்லை. ஆனால், அவளை தோழியாக்கிக் கொள்ள முந்த போவது யார் என்ற பேச்சுவார்த்தை எங்களுக்குள் அடிக்கடி நடக்கும். அன்று அந்தப் பேச்சுவார்த்தைக்கான பிள்ளையார் சுழியை போட்டிருந்தான் விக்டர்.

"நான் அவகிட்ட போய் நம்பர் வாங்கலாம்னு இருக்கேன் டா " என்றான் விக்டர்.

பதறிப் போன நான் "அதெல்லாம் குடுக்க மாட்டா டா !" என்றேன்.

"ஏன் அப்டி சொல்ற ?"

"அது அப்டி தான்"

"அவ தரலைன்னா பாத்துக்கலாம். முதல்ல கேட்ரனும் ஊருக்கு போன உடனே "

"டேய்.. இதெல்லாம் தப்பு டா. நானும் கேப்பேன்" என்றேன் சிறுபிள்ளைத்தனமாக.

"அதெல்லாம் முடியாது நான் தான் கேப்பேன். யாராவது ஒருத்தர் தான் மச்சான் கேக்கணும். எல்லாரும் கேட்டா தரமாட்டா !" என்றான் வஞ்சிக்க நினைத்த விக்டர்.

"அதனால தான் மச்சான் சொல்றேன். நான் கேக்கறேன்னு "

இப்படியே இருவருக்கும் வாய்வழி யுத்தம் நடந்தது. அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பிரவீன்,"சரி , ஒரு போட்டி வெப்போம். யார் ஜெயிக்கராங்களோ அவங்க போய் பேசலாம். இன்னொருத்தர் ஒதுங்கிடனும் " என்றொரு மகத்துவமான சிந்தனையைக் கூறினான்.

இருவரும் ஆமோதித்த உடன் , "சரி , என்ன போட்டினு நீங்களே சொல்லுங்க ?" என்றான் பஞ்சாயத்துத் தலைவராக மாறிய பிரவீன்.

இருவருமே வாழைப்பழ சோம்பேறிகள் என்பதால் வியர்க்காமல் விளையாடக் கூடிய போட்டியாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தோம். ஒரு வழியாக பட்டாணி வாங்க வைத்திருந்த காசில் பலூன் சுடுவதென்று பஞ்சாயத்தில் முடிவானது.

போட்டியின் விதிமுறைகள் என்னவென்றால் இருவருக்கும் ஒரே ஒரு வாய்ப்பளிக்கப்படும். பிரவீன் கூறுகின்ற அதே பலூனை தான் சுட வேண்டும்.

"சரி, ரெண்டு பேருமே சுட்டுட்டா ?" என்று தன் சந்தேகத்தை எழுப்பினான் விக்டர்.

"சுட்டா பாத்துக்கலாம். நீ முதல்ல சுடு நாயே !" என்று கொந்தளித்தான் பிரவீன்.

"அப்ப ரெண்டு பேருமே சுடலைன்னா ?" என்றேன் என் பங்கிற்கு.

"எவனும் அவகிட்ட பேசக்கூடாது. மூடிட்டு அவனவன் வேலைய பாக்கணும் " என்று இன்னும் உக்கிரமானான் பிரவீன்.

இதற்காகவே மொத்தமே 2,3 பலூன்கள் மட்டுமே உள்ள ஒரு கடையை தேர்ந்தெடுத்தனர்.

விக்டர் என்சிசியில் கற்ற ஷூட்டிங் வித்தையை இறக்கி என்னை தோற்கடிக்க ஆயத்தமானான். முகத்தில் எப்படியும் சுட்டுவிடுவேன் என்ற எகத்தாளம்.

துப்பாக்கி அவனிடம் முதலில் சென்றது, ஒரு ப்ளூ கலர் பலூனை கை நீட்டினான் பிரவீன். சற்றே மேலே இருந்தாலும் விக்டர் உயரமானவனாதலால் எப்படியும் சுட்டு விடுவான் என்று நான் உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.

அவனும் "இப்ப எப்டி சுடறேன் பாரு " என்று குறி பார்த்து சுட்டான். 'பட்' என்று பலூன் வெடிக்கும் சத்தம் பக்கத்துக்கு கடையிலிருந்து தான் வந்தது. விக்டர் மிஸ் செய்திருந்தான்.

அவனுடைய ஓவர் கான்பிடன்ஸ் அவனை வீழ்த்திவிட்டது. எனக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.

'இனி நான் தோத்தாலும் பரவால டா' என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் ஜெயித்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் எனக்கு உற்சாகமளித்தது.

துப்பாக்கியை கையில் வாங்கினேன். பிரவீன் ஒரு வைலெட் கலர் பலூனை கை நீட்டினான். குறி பார்த்தேன். துப்பாக்கி சற்றே ஆடியது.

'கருமம் புடிச்ச கையே கொஞ்ச நேரம் நடுங்கித் தொலையாம இரு..' என்று திட்டினேன். கை கட்டுப்பட்டது.

சரியாக 30 விநாடிகள் அதே பொஸிசனில் நின்று அழுத்தினேன். 'பட்' என்ற சத்தம். இம்முறை நான் சுட்ட பலூனிலிருந்து.

சந்தோஷத்தில் குதித்தேன். "யேய்ய்ய்யய்ய்ய்"

"மச்சி, கண்ணும் என்னுது தான் பொண்ணும் என்னுது தான் " என்று விஜய் ஸ்டைலில் விக்டரிடம் டயலாக் பேசினேன்.

"ஓடிரு டா.. செம கடில இருக்கேன் " என்றான்.

"அட போடா !" என்று அன்று முழுவதும் அவனை வெறுப்பேத்தி மகிழ்ந்தேன்.

ஊருக்கு வந்த பின், அவளிடம் ஏதோ ஒரு தைரியத்தில் போன் நம்பரை வாங்கினேன். எங்களுக்குள் நட்பு மலர்ந்தது.

அவள் எனக்கு வீட்டிலிருந்து தக்காளி தொக்கு கொண்டு வந்து கொடுக்க, நான் அவளுக்கு சாக்லேட் கொடுக்க என்று எங்கள் உறவு மேலும் நெருக்கமானது.

'பழக்க வழக்கம் எல்லாம் தக்காளி தொக்கோடு நிறுத்திக்கணும் ' என்றவாக்கில் ஒரு நாள் "நானும் அந்த சீனியரும் கமிட் ஆயிட்டோம் " என்றாள்.   

அன்று தான் தெரிந்தது நான் சுட்ட பலூன் சீனியர் சுட்ட வடையில் பொசுங்கி விட்டதென்று. இன்றளவிலும் அவள் என் தோழியே . ஆனால், அந்த சம்பவம் என்னை முழுதும் மாற்றி விட்டது . விளைவு, இன்றும் நான் 'அவளும் நானும்'  என்ற பாடலைக் கூட 'நானும் நானும்' என்று தான் பாடிக் கொண்டிருக்கிறேன்.

"கொஞ்சம் உளறல்... கொஞ்சம் சிணுங்கல்.... ரெண்டும் கொடுத்தாய்  நீ.. நீ.. நீ..!"

என்று மாதவன் மீரா ஜாஸ்மினுடன் டிவியில் பாடிக்கொண்டிருக்க, அதன் முன் அமர்ந்து மைன்ட் வாய்சில் தன் காதலி மைதிலியுடன் பாடிக் கொண்டிருந்தான் அருண்.

அருகிலிருந்த மேஜையின் மீது வைத்திருந்த செல்போன் சிணுங்கியது. அச்சிணுங்கலை  தந்தவள் நெஞ்சிற்கு பதிலாக கல்லை வைத்திருக்கும் அருணையே சிணுங்க வைக்கும் மைதிலி தான்.

'இப்ப தான்  அவள  பத்தி நெனச்சுட்ருந்தேன். உடனே அவளே கூப்டுட்டா. எப்பதான் அவள பத்தி நெனைக்காம இருந்துருக்கேன்? ஆஹா! செமயா ஒரு டயலாக் மாட்டிருச்சு. இத வச்சு அவகிட்ட கிளாப்ஸ் வாங்கிட வேண்டியது தான் ' என்று பட்டனைத் தட்டி காதில் வைத்தான். எல்லோரிடமும் உர்ரென்று இருக்கும் அருண் மைதிலியிடம் மட்டும் ஒரு ரெமோவாக மாறி விடுவான்.

"ஹே! அழகி..."

"ஹலோ! என்னடா பண்ணிட்ருக்க? " என்றாள் மைதிலி ஒரு அம்மா மகனிடம் பேசும் தொனியில் தனக்கே உரிய கணீர் குரலில்.

"உன் கூட தான் பேசிட்ருக்கேன் செல்லம்"

"காமெடியாக்கும் ? அப்புறமா சிரிக்கறேன். சரி, நா சொல்றத கேளு "

"நீ சொல்றத தானேடி கேட்டுட்டு இருக்கேன் எப்பவும்"

"உன் மொக்கை எல்லாம் அப்புறமா வெச்சுக்க டா. ஒரு மேட்டர் ஆயிருச்சு!!"

"மேட்டரா ?!? யாருக்குள்ள ?" என்று தன்னுடைய இரட்டை அர்த்த நகைச்சுவை உணர்வை தானே பாரட்டியவனாய் சிரித்தான் அருண்.

கடுப்பான மைதிலி , "இப்டி ஆகவலித்தனமா பேசிட்ருந்தா உனக்கு கல்யாணமே ஆகாது டா! " என்றாள்.

"எனக்கு ஆகலைனா , உனக்கும் தானே ஆகாது"

"அதான் சொல்ல வர்றேன். எங்க கேக்கற நீ? எனக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டாங்க டா "

"அடிப்பாவி ! என்னடி இவ்ளோ அசால்ட்டா சொல்ற "

"எங்க  அம்மா கிட்ட நம்ம லவ் மேட்டர சொல்லிட்டேன். அவங்க உன்ன பாக்கணும்னு சொல்றாங்க "

"ஐயையோ! போட்டு விட்டுட்டியா டி ?"

"பயந்து சாவாத டா. அன்னைக்கு என்னமோ பெரிய பருத்திவீரன் மாதிரி 'என்ன விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணுனா கண்டம் துண்டமா வெட்டுவேன் டி' னு  சொன்ன. இப்ப இந்த நடுங்கு நடுங்குற ? என்னைக்கா இருந்தாலும் தெரியப் போறது தானே. அதுவும் இல்லாம எங்க அம்மாவுக்கும் ஒரு டவுட் இருந்துது"

"ரொமாண்டிக் மூட்ல பேசுன டயலாக் எல்லாம் இப்ப கண்டிப்பா சொல்லியே ஆகணுமா? என்ன தான் நடந்துச்சுனு தெளிவா சொல்லேன் டி "

"ம்ம்ம்"

நடந்ததை விவரிக்க ஆரம்பித்தாள் மைதிலி.

சரியாக ஒரு மணி  நேரத்திற்கு முன்பு...

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த மைதிலிக்கு வாசலிலேயே ஆச்சரியம். நான்கு ஜோடி செருப்புகள் புதிதாக இருந்தன.

'யாரோ சொந்தக்காரங்க வந்துட்டாங்க யா. யாரா இருக்கும்? இவங்க வந்துட்டு வடை, பஜ்ஜி  சாப்டுட்டு அமைதியா போனா கூட பரவால. பொண்ணுக்கு எப்ப கல்யாணம்னு ஆரம்பிச்சு விட்டுட்டு போயிருவாங்க. அத நான் தானே சமாளிக்கணும் ' என்ற உறவினர் மீதான அபிப்ராயம் அவளை உள்ளே போக விடாமல் தடுத்தது.

திரும்பி இரண்டு வீடு தள்ளி இருக்கும் தன் தோழி வீட்டிற்கு சென்று விடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால், 'ஏன் லேட்டு ?' என்று அப்பா கேட்கும்போது, லாவண்யா வீட்டுக்கு போனேன்னு  சொன்னாலும் வம்பு,  ஆபீஸ்ல வேலை அதிகம்னு சொன்னாலும் வம்பு. அவள் அப்பாவின் பதில் என்னவாக இருக்கும் என்று அவளுக்கு தெரிந்திருந்தது.

முதல் பதிலுக்கு 'லாவண்யாவ அன்னைக்கு ஒரு பையனோட பாத்தேன், அவகூட சேராதனு  ஏற்கனவே சொல்லிருக்கேன்ல ' என்பார்.  இரண்டாவது பதிலுக்கு 'அவ்ளோ கஷ்டப்பட்டு அந்த வேலைக்கு போகணுமாக்கும். வேலைய விட்டுட்டு, கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கலாம்ல ' என்பார்.

'அதுக்கு உள்ளயே போயிரலாம். உடம்பு சரியில்லனு சொல்லி ரூம்ல தூங்கிட வேண்டியது தான் ' என்று மனதை தேற்றிக் கொண்டு உள்ளே சென்றாள்.

"மாப்ள வீட்ல எல்லாம் பேசிட்டீங்களா ? அவங்களுக்கு தேதி ஓகேவா ?" என்று அவள் அப்பாவின் குரல் கேட்டது.

அவளுக்கு பகீர் என்று தூக்கி வாரிப் போட்டது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்த போது அவளுடைய பெரிய மாமா -  அத்தையும் , சின்ன மாமா -  அத்தையும் சோபாவில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் மைதிலியின் தாய் வழி சொந்தங்கள். அதனால் தான் என்னவோ அவள் அப்பா வலுக்கட்டாய புன்னகையோடு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

"வாங்க மாமா, வாங்க அத்த !"  என்று ரெடிமேட் புன்னகையோடு அவர்களிடம் சென்றாள் மைதிலி.

"வாம்மா ! இப்ப தான் ஆபீஸ் முடிஞ்சுதா ?" என்று வினவினாள் சின்ன அத்தை.

"ஆமா அத்த. பூங்கொடி எப்படி இருக்கா ?"

"ம்ம்ம்... நல்லாருக்கா " என்ற போது  சின்ன அத்தையின் முகம் சுருங்கியதை கவனித்து விட்டாள் மைதிலி.

அதற்குள் அவள் அப்பா இடைமறித்து , "இவள ஆபீஸ் போக வேண்டானு சொன்னா  எங்க கேக்கறா ? படிச்ச படிப்புக்கு கொஞ்ச நாளாவது வேல செய்யணும்னு அடம்புடிக்கறா " என்றார்.

'அடடா ! பாய்ண்டுக்கு வர்றாரே ' என்று பல்லை மட்டும் காட்டினாள்.

"அதுக்கு தான் நாங்க பூங்கொடிய பத்தாவதுலேயே நிறுத்திட்டோம் " என்று படாரென்று கூறினார் சின்ன மாமா.

இவளுக்கு சுறுக்கென்று கோபம் வந்துவிட்டது. 'இதுக்கு நீங்க வெக்கப்படணும்  மிஸ்டர் முத்துக்குமார் ' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். அவள் முகமும் ரெடிமேட் புன்னகையும் ஃபிட்  ஆகாமல் போனது.

அதன் பின் , வந்தவர்களுடைய சில சம்பிரதாய கேள்விகளுக்கு இயந்திரத்தனமாய் பதில் அளித்துவிட்டு தன் அறைக்குச்  சென்றாள்.

உடை மாற்றிக் கொண்டே அவர்கள் ஹாலில் பேசுவதை ஒருவாறு கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அவங்க ரெண்டு மாசம் போகட்டும்னு தான் சொன்னங்க. நாங்க தான் வர்ற முகூர்த்தத்துலயே முடிச்சுடலாம்னு சொல்லிட்டோம். விஷயம் ஊர் பூரா தெரிஞ்சுருச்சு. இனி லேட் பண்ணுனா நல்லருக்காதுல" என்றது சின்ன மாமாவின் குரல்.

"அதுவும் கரெக்ட் தான். பூங்கொடி என்ன சொல்றா ?" என்றார் மைதிலியின் அப்பா.

"அவளுக்கு என்ன?  அந்த பையன் கூட பொள்ளாச்சி வரைக்கும் ஓடிப் போனப்பவே கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டா. இங்க யாருக்கு என்ன வந்தா என்னனு அவ பாட்டுக்கு போய்ட்டா.  அதான் உங்ககிட்ட எல்லாம் பேசிட்டு கல்யாணத்த சீக்கிரம் முடிச்சுடலாம்னு "

மைதிலி சற்றே மனநிம்மதி அடைந்தாள் கல்யாணப் பேச்சு தனக்காக இல்லை என்பதை அறிந்து, இருந்தாலும் யாரிடமும் அதிகம் பேசாத பூங்கொடி இவ்வாறு செய்தாள் என்பது இவளுக்கு ஆச்சரியம் தான்.

அதை உறுதி செய்து கொள்வதற்காக அம்மாவைத் தேடி சமையற்கட்டுக்குள்  நுழைந்தாள்.

அவள் அம்மா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா மாமா அத்தையெல்லாம்  திடீர்னு வந்திருக்காங்க  ?"

"வாடி இப்ப தான் வந்தியா ?"

"ஆமா , ஏதாவது விசேஷமா அவங்க வீட்ல ?"

"அந்த கதைய ஏன் கேக்கற ? பூங்கொடிக்கு கல்யாணமாம்"

"என்னம்மா சொல்ற ? இப்ப தானே 20 வயசு ஆகுது அவளுக்கு "

"ஊமச்சி மாதிரி முணுக் முணுக் னு இருந்துட்டு ஒரு பையன் கூட ஓடிப் போயிட்டா. விஷயம் ஊரெல்லாம் தெரிஞ்சுப் போச்சு இனியுமா வீட்ல வெச்சுருப்பாங்க ! "

"அவளா ? லவ் எல்லாம் பண்றாளா? முன்னாடியே இவங்களுக்கு எல்லாம் தெரியாதா ?"

"அது எவனோ ஒரு ***** ஜாதிப் பையன். வீட்ல சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டங்கனு தெரிஞ்சு பயத்துல ஓடிருக்கா. எப்டியோ புடிச்சுட்டாங்க. அந்த ஜாதிக்காரங்க எல்லாம் நமக்கு கீழ இருக்க வேண்டியவங்க, இப்ப பாரு அவனுக்கே கல்யாணம் பண்ணி வெக்க வேண்டியதா இருக்கு."

"ஏம்மா இப்டி பேசற ? ஜாதி ஜாதி னு"

"அதெல்லாம் உனக்கு புரியாது. நீ சின்ன பொண்ணு. சும்மா இரு "

"சரி , எப்டியோ சந்தோஷமா இருக்கட்டும்னு கல்யாணம் பண்ணி வெச்சுட வேண்டியது தானே !"

"அது எப்டி சந்தோஷமா இருப்பாங்க . 'வேற ஜாதிப் பையன கல்யாணம் பண்ணிக்கற உங்க வீட்ல ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்'னு  எங்க ரெண்டு அக்கா வீட்லயும் சொல்லிட்டாங்க. உங்கப்பா என்ன சொல்வாரோனு பயத்துல இருந்தேன். நல்ல வேலையா அவரும் இது கரெக்ட் தான்னு  சொல்லிட்டார்"

'ச்சே ! சொந்தக்காரங்களுக்காக  மகளோட சந்தோஷத்த கொண்டாட முடியாம இருக்காங்களே ' என்று நினைத்த மைதிலியின் மனதில் சொந்தக்காரர்களின் மதிப்பு மேலும் ஒரு படி  இறங்கியிருந்தது. அதே சமயம் , அவள் மனதில் ஒரு சந்தோஷமும் இருந்தது, அதற்கு காரணம் அருண் தன் ஜாதி என்பதே !

"சரிம்மா.. நான் போய் தூங்கறேன். லைட்டா தல வலிக்குது " என்றாள் அதற்கு தக்க நடிப்போடு.

"காபி கொஞ்சம் போட்டு தரட்டுமா ? குடிச்சா நல்லாருக்கும் " என்றாள் அம்மாவிற்கே உண்டான அன்போடு.

"இல்லம்மா, கொஞ்ச நேரம் தூங்குனா சரி ஆயிடும் "

"சரி , போய்  தூங்கு. நாளைக்கு ஆபீஸ்ல இருந்து கொஞ்சம் சீக்கிரம் வா. ஒரு நல்ல போட்டோ எடுக்கணும் உன்ன "

"எதுக்கும்மா ?"

"மாப்ள வீட்டுக்கு குடுக்க தான். உன்னோட  ஜாதகத்த வெளிய குடுக்க ஆரம்பிக்கலாம்னு  அப்பா சொல்லிட்டார் "

"இப்ப என்னம்மா அவசரம் ?" என்றாள் இதை சற்றும் எதிர்பாராதவளாய் .

"அவசரமா ? இப்ப பண்ணாம வேற எப்ப பண்றது ? வரவங்க எல்லாம் பொண்ணுக்கு எப்ப கல்யாணம்னு தான் கேக்கறாங்க . அதும் இல்லாம ஒரு நல்ல வரன் வந்துருக்கு.  மாப்ள டாக்டர்  சொந்தமா ஒரு கிளினிக் வெச்சுருக்கார் , சொத்தும் நெறய இருக்கு "

"அது மட்டும் போதுமா கல்யாணத்துக்கு ?"

"வேற என்னடி வேணும் ? அதெல்லாம் இருந்தா தான் நீ கல்யாணத்துக்கு அப்புறம் சந்தோஷமா இருக்க முடியும் . நான் சொல்றத மட்டும் கேளு."

சிந்தனையில் மூழ்கினாள் மைதிலி. 'என்ன இது திடீர்னு இப்டி ஒரு குண்ட தூக்கி போடறாங்களே. எப்டி சமாளிக்கறது ?' என்று நினைத்துக் கொண்டே சமையற்கட்டின் கதவு வரை சென்றவள்.,திரும்பி அம்மாவிடம் மெதுவாக வந்தாள்.

"அம்மா"

"சொல்லுடி"

"ஒரு பையன் ....."

"ஒரு பையன் ?" என்று வினவிக்கொண்டே அவள் முகத்தை உற்று நோக்கினார்.

"ஒரு பையன லவ் பண்றேன் மா"

"ஏய்! என்னடி சொல்ற ? வந்தவங்க காதுல விழுந்து தொலச்சற போகுது. உங்க பெரிய அத்த சும்மாவே அந்த ஆட்டம் ஆடுவா !"

"அம்மா ! நிஜமா தான் மா "

"என்னடி இப்டி சொல்ற ? இந்த விஷயம் உங்க அப்பா கேட்டா என்ன சொல்வாரோ " என பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களில் நீர் வரத் தொடங்கியது.

அதைப் பார்த்து மைதிலியின் கண்களிலும் நீர் ஊற்று.

சிறிது நேர மௌனத்திற்குப் பின், நிலைமையை உணர்ந்தவராய் கண்களை துடைத்துக் கொண்டு "சரி, இப்ப எதுவும் பேச வேண்டாம் . வந்திருக்கரவங்க எல்லாம் போகட்டும் நா அப்பா கிட்ட பேசறேன். அந்த பையன ஒரு நாள் வீட்டுக்கு வர சொல்லு, நேர்ல பாத்து பேசணும். நீ இப்ப ரூம்ல போய் தூங்கு "

"சரிம்மா " என்று கண்களைத் துடைத்துக் கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றவளை நிறுத்தினார் அவள் அம்மா.

"ஒரு நிமிஷம் .. அவன் நம்ம ஜாதிப் பையன் தானே ?"

"ஆமாம்மா"

"சரி, போ!" என்றார் அது வரையில் சந்தோஷம் என்கிற முக பாவனையோடு.

இதையெல்லாம் மூச்சு விடாமல் மைதிலி சொல்லிய போது, அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் கேட்டுக் கொண்டிருந்தான் அருண்.

"ஏன்டி ! அங்க அந்த பம்பு பம்பிட்டு தான் என்ன வந்து இந்த மெரட்டு மெரட்டிட்டு இருக்கியா ?" என்றான் அதிர்ச்சியை வெளிக் காட்டிக் கொள்ளதவனாய்.

"அப்புறம் உன்கிட்டயும்  அழணுமா ? அழுதாலும் ரியாக்ட் பண்ண மாட்ட  அப்புறம் என்ன ?" என்று சொல்லிக்  கொண்டிருக்கும்போதே அவளை யாரோ அழைக்க, அவளும் "நா மறுபடியும் கூப்டறேன் " என்று இணைப்பை துண்டித்து விட்டு சென்றாள்.

சரியாக 25 நிமிடங்கள் கழித்து , அருணுக்கு அழைப்பு வந்தது. பல குழப்பங்களிலும் சிந்தனையிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அவன், போனை எடுத்து "ம்ம்ம் " என்றான்.

"அப்பா கிட்ட பேசிட்டேன் டா. அவருக்கு மூஞ்சியே இல்ல. எல்லாரும் ரொம்ப நேரம் அமைதியாவே இருந்தாங்க. அப்புறம் நாளைக்கு அண்ணாவும் அப்பாவும் வீட்ல இருப்பாங்க. நாளைக்கே உன்ன வர சொல்றாங்க " என்றாள் சோகம் ததும்பிய குரலில் மைதிலி.

"நாளைக்கேவா ? எங்க வீட்ல தெரிஞ்சா கொன்னுடுவாங்க "

"ஹலோ சார் ! உங்கள வீட்டோட வந்து சம்மந்தம் பேச கூப்டல. நீ முதல வந்து பேசு. அப்புறம் உங்க வீட்ல பேசிக்கலாம்  "

"சரி டி "

அதற்கு மேல் எதுவும் பேச தோன்றாமல் போனை கட் செய்தனர்.

அருண் தன் சிந்தனைக் கடலுக்குள் மூழ்கினான்.

பெற்றோர் சம்மதத்தோடு தான் தங்கள் திருமணம் நடக்க வேண்டும் என்று இருவருமே பேசி முடிவெடுத்தது தான். ஆனால், இப்போது அவனை ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது. அவனுடைய நேரம் தான். படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இந்த சூழலில் திருமணம் என்பது அவனால் கனவால் கூட நினைக்க முடியாது. இருந்தாலும் மைதிலியையும் விட முடியாது. அவன் வாழ்வின் முழு வசந்தம் அவள்.

'அவளுக்காக நா நாளைக்கு போறேன் . போய்  எப்டியாவது டைம் வாங்கிடணும். அதுக்கப்புறம் மெதுவா நம்ம வீட்ல பேசி சம்மதம் வாங்கணும் ' என்று தன்னை திடபடுத்திக் கொண்டான்.

அதற்கு அடுத்த நாள் வழக்கமாக ஆபீஸ் சென்று விட்டு, மைதிலியின் மெசேஜ் படி அவள் வீட்டிற்கு மாலை 6 மணிக்கு போனான். முன்னொரு முறை அவள் வீட்டில் யாரும் இல்லாத போது சென்றிருக்கிறான்.   ஆனால், இச்சமயம் அவனுக்கு காதலை விட நடுக்கமே அதிகம் இருந்தது.

வாசலில் மைதிலி காத்துக் கொண்டிருந்தாள். தன் பைக்கை நிறுத்திவிட்டு எதுவும் பேசாமல் அவளை பின்தொடர்ந்தான்.

நாட்டாமை படத்தில் சரத்குமாரை கதர் சட்டையிலும், கலர் சட்டையிலும் பார்த்த மாதிரி மைதிலியின் அப்பாவும், அண்ணனும் சோபாவில் உட்கார்ந்திருந்தனர். அவள் அம்மா அருகில் நின்று கொண்டிருந்தார்.

அவர்களிடம் சிரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தோடு அவர்கள் முன் நின்றான் அருண்.

"உக்காரு பா " என்றார் அவள் அப்பா.

"தேங்க்ஸ் அங்கிள் "

"காபி எதாவது சாப்ட்றியா பா ?"

"இல்ல அங்கிள். வேண்டாம் . இப்ப தான் சாப்டேன்"

"தம்பிக்கு சொந்த ஊரு எது ?"

"உடுமலை அங்கிள்"

"அங்க சொந்த வீடு இருக்கா ?"

"இருக்கு அங்கிள். இப்ப கோயம்புத்தூர்ல இருக்கறது வாடகை வீடு தான் "

"ம்ம்ம் .. மைதிலி சொன்னா. அம்மா , அப்பா எல்லாம் என்ன பண்றாங்க ?"

"அப்பா ரிடையர்ட் கிளெர்க். அம்மா வீட்ல தான் அங்கிள் "

"சரி .. உன்னோட ஜாதகத்த கொண்டு வந்து குடு பா .. மைதிலிக்கு ஜாதகத்துல செவ்வாய் தோஷமும் இருக்கு, ராகு கேது வும் இருக்கு "

"அங்கிள்.. இந்த காலத்துல இதெல்லாம் பாக்கணுமா " என்று கூறியவுடன் உணர்ந்தான், அவரை எதிர்த்து பேச ஆரம்பிக்கறேனோ என்று. அதற்கு காரணமும் இருந்தது,

"எந்த காலமா இருந்தாலும் எங்க சைடுல இது கண்டிப்பா பாப்போம். எதுவும் பாக்காம கல்யாணம் பண்ணிட்டு பின்னாடி எதாவது ஆச்சுனா யார் கஷ்டப்படறது "

"சரிங்க அங்கிள்... நான் சீக்கிரமே கொண்டு வந்து தர்றேன் " என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

"எதாவது சாப்டுட்டு போலாமே "

"இல்ல அங்கிள்.. இன்னொரு நாள் சாப்டுக்கறேன் . போய்ட்டு வர்றேன் அங்கிள் "

"சரி தம்பி "

அருண் வாசலை நோக்கிச்  சென்றான். யாரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து மைதிலி வெளியே வந்தாள். ஆனால், அதற்குள் அருண் பைக்கில் வெகு தூரம் போயிருந்தான். 

'வந்துட்டு என்கூட ஒரு வார்த்த கூட பேசாம போறான் பாரு. அவன வெச்சுக்கறேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவள் அப்பா நடந்து கொண்ட விதம் அவளுக்கு மகிழ்ச்சியுடன் நம்பிக்கையும் தந்திருந்தது.

அதே சமயம், பைக்கில் ஒரு உறுதியுடன் சென்று கொண்டிருந்தான் அருண் 'என் ஜாதகம் சுத்த ஜாதகம்னாலும்  எப்டியாவது எல்லார்த்தையும் சமாதனப் படுத்தணும் ' என்று.

பல போன் கால்களும் சந்திப்புகளும், சில வாக்குவாதங்களும் நிறைந்த 9 மாதங்களுக்கு பின் ....

நகரின் முக்கியமான பகுதியில் அமைந்திருந்த பார் அது.

"என் ஆசை மைதிலியே ... என்னை நீ காதலியே ..."  என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

அருண் அதை அழுது கொண்டே பாடிக் கொண்டிருந்தான் .

அருகில் அவன் நண்பன் "டேய் ! இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் அதையே நெனச்சு குடிச்சுட்டிருப்ப.. அத மறந்து வெளிய வாடா " என்று கவலையுடன் கூறினான்.

"மச்சான்.. அந்த நேரத்துல பொறந்தது அவ தப்பா டா ?  அவ ஜாதகத்துக்கு அவளோ நானோ எப்டி டா பொறுப்பாக முடியும். ஜோசியக்காரன் சொல்றான் அவள கல்யாணம் பண்ணுனா நான் செத்துருவனாம். இப்ப மட்டும் என்னவாம் "

"சரி டா .. போதும் டா.. வாடா போலாம்"

"இன்னொரு லார்ஜ் சொல்லு மச்சான். அவளாவது நல்லா இருக்கட்டும் "

அதே நேரத்தில், நகரின் இன்னொரு பகுதியின் ஒரு வீட்டில் யாருக்கும் கேக்காத அழுகை சத்தம் வந்து கொண்டிருந்தது.

மைதிலி பாத்ரூமில் அழுது கொண்டிருந்தாள். தினமும் அவள் அழும்போது  அந்த மொத்த துக்கத்தையும் தாங்கி நின்றிருந்தது அந்த பாத்ரூம் சுவர்கள் .  அன்று அழுகை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. காரணம் அறியா அச்சுவர்கள் அதையும் தாங்கிக் கொண்டது.

போதுமான வரையில் அழுது தீர்த்த மைதிலி, பெட்ரூமிற்கு வந்த போது அவள் கணவன் சந்தோஷமாக உறங்கிக் கொண்டிருந்தான்.  அவன் சந்தோஷத்திற்கு காரணமான  மேஜையின் மீது வைத்திருந்த கவரை எடுத்தாள். அவளின் அளவுக்கதிகமான அழுகைக்கு காரணமும் அதுவே.  அந்த கவரிலிருந்த  ரிப்போர்ட்டை மீண்டும் ஒரு முறை வெளியே எடுத்து பார்த்தாள்.

"ப்ரெக்னன்சி  டெஸ்ட்  பாசிட்டிவ் " என்றிருந்தது.   

"Bro, You gonna stay here for some more time", said Zaheer as I was typing my daily status which I had habit of filling weekly.

'E' letter in 'Automate..' hesitated to show up in monitor. So in my face as I turned back to see my lead 'Zaheer' standing with a mixed feeling.

Zaheer, who was enjoying his after marriage life more in office than home, is a very sincere guy when it comes to work. He postponed his honeymoon to first year anniversary and came to office just after the marriage beating 'Rab ne bana di jodi' Sharukh khan by a whisker.

"Why should we stay bro?", I asked with a hesitant smile on my face.

"We need to deliver this by today as the production is due in next week", he replied with a grumpy face.

I wanted to object him for the late stay. But the brotherhood I maintained with Zaheer stopped me from saying so. Zaheer would have felt the same with his senior too.

With a heavy heart, I questioned him again. "Only me?"

"No, Everyone of us"

This answer made me a bit happy. I even gave a soft laugh which seemed very silly. But what could be done when human feelings overtake.

Everyone in my team got irritated with the laugh which I thought none would have heard. They were about to say something to me. Might have been a curse too. At that time, each one of them got the same happiness which I got few minutes back as the most famous 6.30 guy rushed into the cubicle with an irritated face.

Naushad, a smart worker in the team who is hard to be seen in the office after 6.30. In the Weekends, he will vanish as if he doesn't exist in the world. Yet he completed his work on time giving no room to questions about his timings.

"Shit! I am on the way to my room. They called as if it is going to production by today. Can't they do this thing later? They can't plan anything properly but still wants to deliver the product well before time. It's not a deadline, but a deadly line", he busted out in anger.

Before anyone could react, he started his work. Zaheer went near him and uttered same dialogue in same tone which he said to me. He could have repeated to every other teammate as well.

"When will I get the build?", I queried Zaheer as he was passing my table.

"They are already done with the design and will start the coding in few minutes. You should get the build before 2 o' clock"

I was like 'Does he know it is only 7.30 now' and nodded my head without saying anything. He wasn't interested to see my reaction as he proceeded towards Vinay who was showing his frustration to the Enter button of the keyboard.

Vinay,a multitasker who works in various projects and always end up in a confusion about which project he wants to work.

He was almost kissing the monitor before Zaheer called him to assign the tasks for the night.

I went into my thoughts by scrolling through social media in an incognito window.

'Why should we work like this?'
'Are we working to live or living to work?'
'Are we working satisfactorily or falsing ourselves?'
'Are we doing anything useful to the society?'

Thoughts like these started to occupy me before I was disturbed by a word which came as an answer to these questions as well.


"Dinner"

"Loges, tell me the menu for dinner", asked Zaheer.

I told him to note usual dosa with a mandatory omelette on my name. Almost everyone ordered the same menu except Sivaraj who was busy in gaming.

"4 parottas and a chicken fried rice", he shouted when he was asked to tell.

Sivaraj,a workhorse of the team who will always be seen with a mobile in hand and a smile in face.

Everyone was amazed at his order but none spilled a word on that. As always, Moorthy came forward to troll him.

"Why buddy? Is that enough for you? You won't get anything until morning. Please order something more"

All laughed at the sametime.

Moorthy, a happy go-lucky guy who trolls almost everyone in the team and gets trolled by everyone at times.

I started to prepare my tummy for the dinner as it was already shouting to get something.

I was waiting for my dosa to be on my plate. But what came was an issue to be debugged.

I saw the time, it was 9.30.

'Loges, Complete it before the dinner comes', I told to myself.

I went to work on that issue. It seemed simple at first, but as the time passed I was losing my confidence.

The dinner came at 10.30. But Zaheer told me to have dinner after debugging the issue and he was waiting for me.

I wanted to refresh my mind. I got remembered of Popeye who got power by eating spinach to hit Bluto. I rushed into cafeteria to have a quick bite of snack. I got a glimpse of potato chips. I had few pieces of it. I didn't get any power instead I got a nasty burp. After all, I didn't have a Bluto to fight. Or I wasn't a Popeye. Both meant the same.

Somehow I wanted to debug the issue. Movies I saw worked for me at that time. I picked a cup of coffee from cafeteria and returned back to my place. I started to sip the coffee and debug the issue simultaneously thinking myself a 'Yaaradi Nee Mohini' Dhanush. In that movie, he finds out a deadly issue with few sips of coffee but what I could find was I didn't even know to mix an appropriate amount of sugar in my coffee. The coffee was worser than my code which at least work at times.

Out of sympathy, Zaheer who was feeling sleepy came towards me and said, 'Let it be and We will have dinner'

"No Bro, I will complete and then eat", I delivered formality statement controlling my happiness.

"Oh Boy! It's okay. It will not go anywhere. You can see it after the dinner"

I nodded my head and locked my computer before he could change his mind.

I followed him to pick my parcel. He said, "Dinner will become dry as time goes on" to convince me more. I saw the time. It was 12 already.

As we were going towards the TV room, I heard a moaning sound from the sofa. I went nearby to see who it was.

It was Giri.A pure devotee who always carries a good boy look in face yet the top commentator on 18+ jokes. Need to say, his devotion will make you fall in love with the god.

He was talking on phone. As I went near him, he lowered his voice and said "1 minute" in phone.

"Loges", he said with wicked smile.

"Bro, whom you are talking to at this time?"

"With my Bro"

"Did you have your dinner?"

"Yes, I had it with my Bro"

"How will you go in the morning?"

"My Bro will come and pick me up"

"Okay Bro, Carry on"

He continued his phone talk after nodding his head to the end of my question torture. The chemistry he worked out with his brother was an upbeat one compared to 'Vaanathai pola'.

We finished our dinner with the regular set of songs which were exhaustively being played on that TV. When I came back to my desk, it was 1.
Again, I got back to my business of debugging the issue. It should have been the late night dosa which inspired me to debug the issue. Food is always a driving force.
By the time I completed debugging, it was 2. It was a small Jerry which always challenged a big Tom. That day I became a Tom to suffer a lot to catch that Jerry issue. I was cursing myself for being too slow. At the sametime, I felt myself proud for finding out a most disturbing issue and played a mass bgm to myself.

Before I could enjoy the bgm completely, an eerie sound came from conference room which haunted me. It was like someone shouting in anger but I couldn't hear anything clearly. I slowly went near the conference room which was 200m away from my place and opened the door without making noise.

"Mongoooooooo.... mongo..Mongooooooooo", said Ajay's voice.

Ajay, a passionate worker who feels for the mistake made in previous project when he is working in a current project.

He was blabbering in sleep. He uttered few more words in british english which I could hardly understand. Some words took a direct dig at one who was assigning him tasks. I didn't want to disturb him. Atleast he could release his frustration in sleep.

As I came back to my place, my monitor was blinking because of the message I got. I started to read the message by blinking my eyes with same rhythm as the monitor.

It read. 'Logeswaran, Build Ready.Please Validate.'

As I was reading this message, someone patted on my shoulder. It was my General Manager who was none other than the sender of the message.

He asked, "Done ah?"

"Aiyo.. Anna!"

"What?"

"Testing is going on"

"Okay, Take your own time. But make sure that you finish up in 10 minutes as we need to run the feed in production server"

"Sure Bro!"

When I finished up complete testing, it was 10 in the morning after multiple builds and failures. He might have been pissed off with my mistakes. But I couldn't help. Sleep, my best friend turned out to be my biggest enemy on that day.

When we completed the feed setup in production server and started the feed, it was 12 noon. Almost everyone completed their tasks at the same time. At Last, We came out of the door together at 12.15 pm. Someone might have thought we were on a team outing trip.

Some random guy from the neighbour team shouted, "Half a day va? Enjoy".


அன்புள்ள பேனாவிற்கு ,

உன்னிடம் கொடுக்க நினைப்பது ஓர் நன்றி , கேட்க நினைப்பது ஓர் மன்னிப்பு.

"நன்றி மறப்பது நன்றன்று " என்று என் நாவில் உதிப்பதற்கு முன், என் கண்ணில் உதிக்க வைத்ததையே காரணமாகக் கொண்டு இந்த நன்றி.  என்னை நான் வெளிக்கொணர உன்னை பயன்படுத்திக் கொண்ட  என் சுயநலத்திற்கு துணை போன உனக்கு இந்நன்றி. எண்ணங்கள் யாவும் ஆழம் நிறைந்த ஓர் பாதை . அதில் என் நாவையும் மீறி தொலை தூரம் பயணம் செய்ததற்கு  இந்நன்றி.

என் உள்ளம் கேட்ட அனைத்தையும் கொடுத்த நீ , நான் கேட்கும் மன்னிப்பை கொடுக்கமாட்டாயா ? உன்னைப் பற்றி நீயே தம்பட்டம் அடித்துக் கொள்ளப் போகும் அவல நிலையை உண்டாக்கும் இப்பாவி கேட்கும் மன்னிப்பு ஓர் முன் ஜாமீன்.  வாய்தா வைக்காமல் விடுவிப்பதில் நீ குமாரசாமியின் குடும்பம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை.

நான் உன்னை முதன்முதலில் தழுவிய அந்த கணம், இந்நேரம் இந்நாள் என்று எனக்கு துல்லியமாய் தெரியவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்த நீ என் முன்னாள் காதலி அல்ல, எந்நாளும் காதலி !

உன்னை தழுவ நான் உன் பாட்டனான பென்சில் குச்சியிடமும், உன் அப்பனான பென்சிலிடமும் செய்த யுத்தம் உலகப் போரைப் போல் வெகு நாட்கள் நீடித்தது. இதெல்லாம் விட இந்த சமூகமும் ஐந்து வயது சிறுவனுக்கு ஏன் இந்த அபத்தமான ஆசை என்று வினவியது தான் காலத்தின் கொடுமை.

உன் பாட்டனுடன் நான் செய்த சண்டையில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று உண்டு . "இ " என்ற எழுத்தினால் உன் பாட்டன் கொடுத்த இம்சை அது. அதில் அவன் அடிக்கடி செய்த பிழையில், கொட்டு வாங்கியது என் தலை. அதுவும் தமிழாசிரியை என்னும் மாறுவேடத்தில் இருந்த என் வகுப்புப் பெண்ணின் தாயிடம். உன் பாட்டனுக்கு அறிவே இல்லையா ? ஒரு சிறுவனிடம் இப்படியா நடந்து கொள்வது ? அதற்கு பிரதிபலனாக தான் இரண்டே வருடத்தில் செத்தொழிந்தான்.

உன் அப்பன் மட்டும் என்ன ஒழுக்கமா?  'ஏன் அவருக்கு என்ன குறைச்சல்' என்று கேட்கிறாயா கண்ணம்மா ? கூர்மையாவதற்காக குறைவது தான் அவன் குறைச்சல். மை உண்டு என்னுள் மையம் கொண்ட  உனக்கு நிஜமாகவே அவன் தான் அப்பனா என்பது என் நீண்ட நாள் சந்தேகம். இருந்தாலும் அவன் உன் மேல் கொண்ட அன்பை பாராட்டியே  ஆக வேண்டும். என் படிப்பு முடியும் வரை உன்னுடனே இருந்து நமக்கு கட்டம் கட்டி கொடுத்து காத்த பாசக்காரன். மாப்பிள்ளை வீட்டில் மகளுக்காக வாழ்ந்த மாமனாராக இருந்தாலும் தனி மரியாதை. இனி அவன் தொல்லையும் இல்லை.

என்னுள் நீ வந்த பிறகு , எனக்குள் நடந்த மாற்றங்களைக் கண்டு நானே வியக்கிறேன்.

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ,
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் "

என்பதற்கேற்ப வாழ்ந்து வருகிறோம் . அதற்கு காதல் மட்டும் காரணமல்ல, காலம் கடந்த சமூகத்தின் சாடலும். நான் பேச நினைப்பதை அப்படியே பேசினால்,  குற்றம் சொல்ல ஆயிரம் குரல்கள் குமுறிக்கொண்டு வரும். நீ பேசினால் அதே குரல்கள் குசலம் விசாரிக்கும். எழுத்து சுதந்திரம் என்றொரு பட்டபிஷேகமும் நடக்கும். என்னை பொறுத்தமட்டில் எழுத்து என்பதே சுதந்திரம் தானே. ஒவ்வொன்றும் இன்னொன்றை தொந்தரவு செய்யாமல், தனித்து நின்று அர்த்தம் கொடுப்பதில் தனக்கான வேலையை செவ்வனே செய்கிறது. அது இன்னொரு சகாவிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதில்லை, அவன் என்ன சொல்வானோ என்ற பயம் இல்லை , அவன் என்ன இப்படியெல்லாம் செய்கிறான் என்ற பொறாமை இல்லை, அவன் கண்டு கொள்ளவில்லையே என்ற தவிப்பு இல்லை. சார்புத்தன்மை என்று பார்த்தால் உயிரும் மெய்யும் கூடி உயிர்மெய் தந்த காதல் மட்டுமே மிஞ்சுகிறது.
இப்படியொரு வாழ்வை கனவிலும் வாழ முடியுமா ? அதனால் தான் காகிதத்தில் வாழ்கிறேன் உன்னுடன்..!

கண்மணியே! இதுவரை காகிதத்தின் மேல் நாம் செய்த காதலில் பிறந்த கட்டுரைக் குழந்தைகள் யாவும் என் அறிவை உயர்த்துவதற்காக வாழ்வதாக எண்ணி, காரியவாதியான மதிப்பெண்களுக்காக வாழ்ந்து அற்ப ஆயுளில் மடிந்தும் போயின. அவர்களின் கதியை விதியென்று நினைத்து விலகுவோம். இனி நாம் செய்யப்போகும் காதலில் பிறக்கப் போகும் கட்டுரைக் குழந்தைகளும் , கவிதைக் குழந்தைகளும் பிரதிபலிக்கப் போவது நம்மைக் கொண்ட காதலையும் இவ்வாழ்வின் மேல் நாம் கொண்ட காதலையும் தான். அதன் ஆயுள் குறைவாய் இருப்பினும், அர்த்தம் நிறைவாய் இருக்கும்.

அறிவை நீட்டி அன்பைக் கூட்டி  என்னை வாழ வைக்கும் தேவதையே ! உனக்கு என்னுடைய கோடி முத்தங்கள்...

என்றும் புன்னகையுடன்,
உன் ஆசை காதலன்.
Sweetness doesn't come from just things, but persons around you.

Only few things can bring both colours and sweetness to your life - 'GEMS' is a must in that list..

Everyone needs something like this to avoid capturing whichever is unneeded. Lucky that my one got it.

The sound 'E' stands between the extremes of desire and care. The choice is yours...
Be a monk, desire for nothing and care for none.
Be a monkE(y), desire for everything and care for everyone.

Fortunately, the sound of smile is 'E' - Irony...

Is the sun sets in the west direction or the direction where sun sets is called west??

She was there to welcome me to this world,
As a Doctor...
She was there to give me first touch of pain,
As a Nurse...
She was there to give me first touch of care,
As an Aunt...
She was there to give me first piece of Advice,
As a Grandma...
She was there to share me the only piece of chocolate,
As a Sister...
She was there to stimulate my boyish hormones,
As an Actress...
She was there to take out my first blush,
As a Crush...
She was there to give a free advice in every single decision of mine,
As a neighbourhood Aunt...
She was there to share my good and bad in the same way,
As a Friend...
She was there to make me What I am and Who I am today,
As a Mother...
She is a Woman.
She is like air everywhere around you to shape you up.
Happy Women's day..smile emoticon
PS: Some of them stated above should be in present tense and plural as well..smile emoticon
விடுதி வரமா சாபமா எனும்
விடுகதைக்கு கிடைத்த விடையானவன்...
தனிமையும் நானும் தத்தளிக்கையில்
தன்னையும் இணைத்து தித்திப்பை தந்தவன்...
பயில்வதற்கு பங்காளியாய் பலர்
பாடத்தை விடுத்த படங்களுக்கு பலனாய் இவன்...
அன்பை வெளிநீட்டிக் கொள்ளாதவனாய் அவையில்
ஆபத்தென்றால் அலறி வருவான் நடு்சாமத்திற்கும் இடையில்...
ஒரே தட்டில் ஒன்றியவர்களும் ஒன்றமுடியாமல் போக
இன்றியமையாதவனாய் இன்றும் இவன்...
பதில்களுக்கு கேள்வியாய் என் கேள்விகளுக்கு பதிலாய்...
உணர்ச்சிகளின் வசப்படாமல் வசப்படுத்தும் வல்லவனாய் இவன்...
அவ்வளவு நல்லவனா இவன்...?


7 மணி 40 நிமிடங்கள் 33 விநாடிகள் நான் பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் காலடி எடுத்து வைத்த போது...

"காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றை தேடுதே"

என்று இளையராஜா டீக்கடையில் வருடிக்கொண்டிருக்க, கீழே விழுந்த 5 ரூபாயை ஓர் முதியவர் தேடிக்கொண்டிருந்தார். அதைக் கண்டுகொள்ளாதவனாய் ஓர் இளைஞன் 7:30 மணி பேருந்து சென்றுவிட்டதா என்று பதில் சொல்ல இஷ்டமே இல்லாத சிலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். பேருந்து வந்தால் மட்டுமே போதும் என்பவனுக்கு, நேரத்திற்கு பேருந்தை எதிர்பார்ப்பது ஆடம்பரம் தானே!

என்றும் போல் அம்மா வைத்த ரசம் பையினுள் சிந்திவிடக்கூடாதெனும் சிந்தனையில் அலர்ட் ஆறுமுகமாய் நான் தலையை திருப்பாமல் திருப்பி, அசையாமல் அசைத்து 'கிங் பிஷர்' வருகிறதா என்று பார்த்தேன். கிங் பிஷர் என்பது நான் வழக்கமாக தவறவிடும் ஓர் பேருந்தின் பெயர். படிப்போரின் சிந்தனை சிதறிவிடக்கூடதென்பதால் இச்சிறு விளக்கம்.

ரேஷன் கடையிலிருந்து அரிசிப்பையை ஒரு பக்கம் சாய்ந்து கஷ்டப்பட்டு தூக்கி வரும் ஓர் சிறுவனை போல ஈரோட்டிலிருந்து ஒரு பேருந்து ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. நிச்சயமாக அது கிங் பிஷர் இல்லை. சாய்ந்து வந்தாலும் தள்ளாடாமல் வந்ததே காரணம். நிறுத்தத்தில் அசால்டாக நின்று கொண்டிருந்த அனைவரும் ஆயத்தமானார்கள்.

ஆயத்தமான 10 பேர் கொண்ட கும்பலை கடக்கும் போது மட்டும் வேகம் எடுத்தது அந்த ஊர்தி. நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சரியாக 100 மீட்டர் தொலைவில் நின்றது. அனைவரும் ஓட ஆரம்பித்தனர். மந்தையில் இணைந்த ஆடாக நானும் மனதிற்குள் சில ஹீரோக்களின் பின்னணி இசையை வாசித்தவாறு பேருந்தை நோக்கி ஓடினேன். ஆனால் பார்த்தவர்களுக்கு என்னமோ ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ என்று தான் தோன்றியிருக்கும். பேருந்தின் படிக்கட்டுகளை நெருங்கிய போது என்னுள் வாங்கிய மூச்சு மென்பொருள் பணி என்னை எவ்வளவு மென்மையானவனாய் மாற்றிவிட்டதென்பதை உணர்ந்தேன். ஏற்கனவே அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பேருந்தில் நிற்பதற்கான இடத்தைப் பிடிக்க சில தள்ளுமுள்ளுகளை சமாளித்து ஏறினேன்.

‘உள்ள போ , உள்ள போ ! எடம் இருக்குது பார்... நடு வண்டில...’ என்று அனைவரையும் தலையணை பஞ்சாய் பேருந்தினுள் அமுத்திக் கொண்டார் நடத்துநர்.

பையை ஓர் பாதுகாப்பான (?!?) இடத்தில் வைத்த பிறகு, அருகிலிருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.

காலையில் நேரம் கழித்து காபி போட்ட மனைவியை சகித்துக் கொள்ளமுடியாத ஒருவர் நாட்டின் சகிப்புத்தன்மையைப் பற்றி பேசி அருகிலிருந்தவரின் சகிப்புத்தன்மையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

“நாட்டுல எவனும் ஒழுங்கில்ல சார்.. எவனுக்கும் பொறுமையும் இல்ல.. எது பண்ணுனாலும் நொட்ட சொல்லிட்டிருக்கானுங்க”
அருகிலிருந்தவரும் ‘நீ மட்டும் இப்ப என்ன பண்ணிட்டிருக்கியாம்’ என்ற வாக்கில் மூஞ்சியை வைத்துக் கொண்டு ம்ம்ம் போட்டுக் கொண்டிருந்தார்.

அவர்களுக்கு அருகிலிருந்தவரோ நமக்கு ஏன் இந்த பாடு என்று என் அறிவுக்கு எட்டாத அரசியலையும், என் வங்கிக் கணக்குக்கு எட்டாத பொருளாதாரத்தையும் தினசரிப் பத்திரிக்கையில் அலசிக் கொண்டிருந்தார். விளையாட்டுப் பகுதி வந்தால் நானும் கொஞ்சம் அலசிக் கொள்ளலாம்  என்றிருந்த எனக்கு ஏமாற்றமே. உலகக் கோப்பையில் இந்தியா தோற்ற பிறகு, யுவராஜ் சிங் வீட்டின் மீது கல்லெறிந்து விட்டு கிரிக்கெட்டை வெறுத்தார் போல் நடிக்கும் பட்டியலில் அவரும் ஒருவராய் இருக்கலாம்.

“சார்.. கொஞ்சம் தள்ளி உக்காருங்க” என்று பின்னால் ஒரு குரல். மூவர் சீட்டில் உட்காந்திருந்த இருவரினூடே இடைவெளியை கண்டுபிடித்த குரல் அது.

“உள்ள போங்க சார்... நாங்க கருமத்தம்பட்டியில இறங்கிடுவோம்” என்றார் அந்த இருவரில் ஒருவர் காரணத்தைக் கண்டுபிடித்து பேருந்து ஏறியது போல.

“சார்.. நான் அவிநாசியிலயே இறங்கிடுவேன்“  என்றார் ஒரு வஞ்சப் புன்னகையோடு.

உட்கார்ந்திருந்தவர்களும் வேறு வழியில்லாமல் நகர்ந்தும் நகராமலும் சிறு இடம் விட்டு, தள்ளி உட்கார்ந்தனர். இவரும் சிரித்த பாவத்திற்கு உட்கார முடியாமல் உட்கார்ந்தார். நம்மை வெறுப்பேத்தியவரை கடுப்பேத்தும் ஓர் அல்ப சுகம் அலாதியானது தானே!

இந்த பஞ்சாயத்து முடிவதற்குள் பேருந்தின் முன்பகுதியிலிருந்து ஓர் சலசலப்பு. என்னவென்று கவனிக்கையில் அது ஓர் கம்பீரமான பெண்மணியின் குரல். ‘கம்பீரம்’ , ‘பெண்மணி’ இரண்டும் ஒரு சேர வரும்போது சொல்முரணணியாக பார்க்கப்படும் சூழலில் அப்படியொரு குரல் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் எல்லாப் பொருத்தங்களையும் கொண்டிருந்தது.

“என்னங்க... பஸ் ஸ்டாப்ல தானே நிக்கணும்... இவ்ளோ தூரம் தள்ளி நிறுத்துனா எல்லாரும் எப்படி ஏறுவாங்களாம்“ என்று ஓட்டுநரிடம் உறுமியது அந்த கம்பீரம்.

“அதெல்லாம் எதுக்கு கேக்கற. பஸ் ஏறுனியா, டிக்கெட் எடுத்தியா, வந்தியானு இருக்கணும்” என்று சம்மந்தமே இல்லாமல் ஒரு பதில்.

“ஆனா, ரூல்ஸ் படி அங்க தானே நிக்கணும். நாங்க தானே பஸ் ஏறுறோம். எங்களுக்காக தானே பஸ்” என்று நியாயமான நியாயத்தை கூறினார் அந்த பெண்மணி.

“ஓ... ரூல்ஸ் பேசறியா நீ. எனக்கு தெரிஞ்ச ரூல்ஸ் இதான்” என்று கோபத்தை காட்ட பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்.

உடனே பேருந்தின் பின்பகுதியில் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துநர் இறங்கி பஞ்சாயத்து தலைவராய் முன்னால் ஏறினார்.

“என்னம்மா உனக்கு பிரச்சனை ? அதான் பஸ் ஏறிட்டல. அப்புறம் என்ன” என்று நியாயமாக பேசுவது போலவே பேசினார் நம் பஞ்சாயத்து தலைவர்.

“பஸ் எதுக்கு தள்ளி நிறுத்தறிங்க. கரக்டான எடத்துல நிக்கணும் கேட்டது தப்பா?” விட்டுக்கொடுக்காமல் நம் கதாநாயகி.

“ரூல்ஸ் எல்லாம் நீ பேசக்கூடாது. அப்புறம் எதுக்கு இதுல ஏறுன? வாய மூடிட்டு வர்றதுனா வா இல்லனா எறங்கிடு”

“நா எதுக்கு எறங்கணும். டிக்கட் எடுக்கறேன்ல”

“அப்ப பேசாம வா..: “ கிட்டதட்ட ஒரு கட்டளை அந்த பெண்மணியிடம்.

“நீ எதுக்கு ணா இது பேசறது எல்லாம் காதுல வாங்கிட்டு. நீ வண்டிய எடுணா” கெஞ்சல் ஓட்டுநரிடம் என்று வித்தியாசம் காட்டினார் நடத்துநர்.

“பேசாம வர்றதுனா வர சொல்லு” என்று வண்டியை எடுத்தார் நியாயம் தன் பக்கம் இருப்பதைப் போல பிம்பத்தை முன்னிறுத்தி.

“சரி. நா பேசல” என்றார் தன் நியாயத்திற்கு எவரும் துணை நிற்காத விரக்தியில்.

பேருந்து புறப்பட்டது.

ஒரு 200 மீட்டர் சென்றிருக்கும், மறுபடியும் மனம் பொறுக்காதவராய் “ஆனாலும் நீங்க செஞ்சது தப்பு தான்” என்றார் அந்த பெண்மணி.

“இந்த பொம்பளைய வெச்சிக்கிட்டு பஸ் ஓட்ட முடியாது யா. கருமத்த” என்று பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி சென்றுவிட்டார் ஓட்டுநர் அந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல. உண்மை கோபத்தை வரவழைப்பது தான், ஆனாலும் இது அர்த்தமற்ற கோபமாக தோன்றியது.

2 நிமிடத்திற்கு எவருக்கும் எதுவும் புரியவில்லை. அதன்பிறகு, நடத்துநருடன் 10 பேர் இறங்கி ஓட்டுநரை சமாதானம் செய்ய சென்றனர் முனகிக்கொண்டே.

உடனே பேருந்தினுள் அர்ச்சனை ஆரம்பித்தது. ஓட்டுநருக்கு அல்ல அப்பெண்மணிக்கு.

“ஏம்மா... அவன் அவன் வேலைக்கு போக வேண்டாமா? நீ பாட்டுக்கு டிரைவர கடுப்பேத்திவிட்டுட்ட”

“ஒரு பொம்பளைக்கு அப்படி என்ன திமிரு ?”

“ஒரு பொம்பள எப்படி ரூல்ஸ் பேசலாம் ?”

“ஆனாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆகாது”

என ஆங்காங்கே தன் வீட்டு பெண்மணியை திட்டமுடியாத கையாலாகாதனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் சில ஆண்கள்.

“இதில் யார் மீது தவறு ? அந்த பெண் கேட்டது நியாயம் தானே” என்ற குழப்பத்தில் நான். பெண்மைக்கும் பெண்ணுக்கும் எதிரான குரல்கள் வரும்போது காரண காரணிகளை ஆராய்வது முட்டாள்தனம் தான்.

ஆனால், அப்பெண்ணுக்கு ஆதரவாக ஒரு குரல் கூட ஒலிக்கவில்லை என்பது தான் வருத்தம். அது அவர் பெண் என்பதாலா? அல்லது அவர் கேட்டது நியாயம் என்பதாலா?
அவரும் மேற்கொண்டு பேச விருப்பமில்லாமல் அமைதியானார்.

நடத்துநரும் அந்த 10 பேரும் ஏதோ அநியாயத்தைக் கண்டு பொங்கியவரை ஆசுவாசப்படுத்தியது போல மகிழ்ச்சியுடன் அழைத்து வந்தனர். பேருந்தும் புறப்பட்டது ஓட்டுநரின் ஏளன பார்வையோடு.

அதைப் பற்றி எவரும் வாய் திறக்கவில்லை. பாவம்! அப்பெண்மணி எங்கு செல்ல எண்ணி வந்தாரோ அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கினார். இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது சரியாக இருக்கும்.

இறங்கிய பின், பேருந்தையும் பேருந்தில் இருந்தவர்களையும் ஒரு பார்வை பார்த்தார். அப்பார்வை “உங்களுக்காக பேசியது என் குற்றம் தான்” என்று கோபத்தையும் அழுகையையும் கலந்து கூறியது. இப்படி பல பார்வைகளை உண்டாக்கிய குருடர்களுள் ஒருவனாய் கூனிக் குறுகிப் போனேன் நான்.