நட்பு

, , No Comments
விடுதி வரமா சாபமா எனும்
விடுகதைக்கு கிடைத்த விடையானவன்...
தனிமையும் நானும் தத்தளிக்கையில்
தன்னையும் இணைத்து தித்திப்பை தந்தவன்...
பயில்வதற்கு பங்காளியாய் பலர்
பாடத்தை விடுத்த படங்களுக்கு பலனாய் இவன்...
அன்பை வெளிநீட்டிக் கொள்ளாதவனாய் அவையில்
ஆபத்தென்றால் அலறி வருவான் நடு்சாமத்திற்கும் இடையில்...
ஒரே தட்டில் ஒன்றியவர்களும் ஒன்றமுடியாமல் போக
இன்றியமையாதவனாய் இன்றும் இவன்...
பதில்களுக்கு கேள்வியாய் என் கேள்விகளுக்கு பதிலாய்...
உணர்ச்சிகளின் வசப்படாமல் வசப்படுத்தும் வல்லவனாய் இவன்...
அவ்வளவு நல்லவனா இவன்...?

0 comments:

Post a Comment