ஒரு மரணச் செய்தி புதைந்து கிடைக்கும் எத்தனையோ நினைவுகளை எழுப்பி விடுகிறது.


இன்று நெருங்கிய நண்பன் ஒருவனின் தந்தை இறந்த செய்தி வந்தது. கல்லூரி முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள். இந்த 10 ஆண்டுகளில் நானும் என் நண்பனும் சந்தித்துக் கொண்டதே சில முறை தான். அவனது தந்தையை கல்லூரி படிக்கும்போது இரண்டொரு முறை சந்தித்திருக்கிறேன். கடைசியாக அவனது திருமண விழாவில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. அப்போது கூட அவருக்கு என் பெயர் ஞாபகம் இருந்திருக்குமா என்றால் தெரியவில்லை. இருந்தும் இந்த செய்தி கேட்டதிலிருந்து ஒரு வித கனமான உணர்வு. நண்பனின் தந்தை என்பதையும் தாண்டிய ஒரு சோகம். என்னவென்று யோசித்துப் பார்க்கையில், அவருக்கும் எனக்குமான நடந்த உரையாடல்கள் சிலவே எனினும் ஆழமான நினைவுகள் உண்டு. மனிதர்கள் தான் எவ்வளவு எளிதில் நினைவுகளை உருவாக்கிவிடுகிறார்கள்.


நாங்கள் மூன்றாம் வருட செமஸ்டர் விடுமுறையில் ட்ரெய்னிங் என்கிற சாக்கில் மேட்டூர் என் நண்பனின் வீட்டில் தங்கியிருந்தோம். பர்மிசன் கிடைக்கவில்லை என்று போக்கு காட்டிவிட்டு ஓகேனக்கல் அருவி, மேட்டூர் அணை, திரைப்படம் என 5 நாட்களை கடத்திவிட்டு ஊர் கிளம்ப ஆயத்தமானோம். அங்கிருந்த நாட்கள் அனைத்தும் நல்ல தீனி. கிளம்புகிற நாள் என்று சிறப்பு கவனிப்பு. மட்டன், சிக்கன் என விறுவிறுப்பான விருந்து. "யப்பா, போயிட்டு வாங்க டா !" என அவர்களே நினைத்திருக்க கூடும் என்று நினைத்துக் கொண்டேன். வீடு திரும்பி பையைப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சர்யம். அவனது தந்தை எங்களுக்கே தெரியாமல் எங்கள் பைகளில் எல்லாம் வாழ்த்துச் செய்தியுடன் ஒரு 100 ரூபாய் நோட்டும் வைத்திருந்தார். அப்போது 100 ருபாய் எல்லாம் பெரிய தொகை. கையில் கிடைத்தாலே 10 பேர் சேர்ந்து சென்று டீ குடிக்க சரியாக இருக்கும். ஆனால், அதை செலவு செய்ய மனம் வரவில்லை. அந்த வாழ்த்துச் செய்தியும் 100 ருபாய் நோட்டும் எனக்கு பர்சனலாக இருந்தது. இன்றும் இருக்கிறது. பத்திரமாய்!




இன்னொரு முறை நாங்கள் சந்தித்துக் கொண்டது கல்லூரியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில். அட்டெண்டன்ஸ் ஒழுங்காக இல்லாத மாணவர்களின் பெற்றோர் கண்டிப்பாக வந்து கையெழுத்திட வேண்டும் என்கிற அடிப்படையில் அவன் வீட்டில் இருந்தும் என் வீட்டில் இருந்தும் வந்திருந்தனர். ஆசிரியர்கள் கழுவி ஊற்றும் சம்பிரதாயங்களுக்கு பிறகு அப்பா அம்மாவை பஸ் ஏற்றிவிடும் வழியில் அவரை சந்தித்தேன். "யாரு அப்பா அம்மாவா?  உங்க பையன் ரொம்ப நல்ல தெறமசாளி. பெரிய ஆளா வருவான்.  உள்ள சும்மா ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. என்ன தெரியும் நம்ம பசங்கள பத்தி" என்றார் சிரித்துக் கொண்டே. வீட்டிற்கு லெட்டர் வந்த கட்டாயத்தால்  வேறு வழியின்றி அந்த சந்திப்பிற்கு வந்த என் பெற்றோரிடம் அந்த சர்டிபிகேட் ஒரு நல்ல நகை முரண். அவர் நிஜமாக தான் அப்படி நினைத்து சொன்னாரா என தெரியவில்லை எனினும் எனக்கு அது நல்ல பூஸ்ட்.


People who make effort to keep people happy will always be remembered.


மனிதர்கள் தான் எவ்வளவு எளிதாக நினைவுகளை உருவாக்கிவிடுகிறார்கள்.

"கடவுள் இருக்கிறாரா?"


இக்கேள்வியை நான் பள்ளியில் படிக்கும் சமயத்தில் கேட்டிருந்தால், கண்டிப்பாக இருக்கிறார் என்றிருப்பேன். இதே சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால் இல்லவே இல்லை என்று சண்டைக்கு கூட வந்திருப்பேன். 'சரி, இப்போ என்ன தான் டா சொல்ற?' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. அதை தெரிந்து கொள்ள நாம் சில வருடங்கள் பின் நோக்கியும், மைசூரை நோக்கியும் செல்ல வேண்டும். குத்துமதிப்பாக 5 ஆண்டுகள்.


என் தங்கை கல்லூரி முடிந்த கையுடன் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர மைசூர் வர சொல்லியிருந்தார்கள். குடும்பமாக ஒரு 6-7 பேர் வாடகைக் கார் வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து சென்றோம். ஆபிஸில் சேர எதற்கு இத்தனைப் பேர் என்ற ஒரு கேள்வி வரலாம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செல்லப் பிள்ளையான என் தங்கை வீட்டில் இருந்து வெளியே சென்று தங்க ஆயத்தமாகும் முதல் பயணம். அந்த மென்சோகம் பயணம் தொடங்கும் முன்பே தொடங்கி விட்டது. அது கூடக்கூட அங்கே செல்லும் ஆட்களின் எண்ணிக்கையும் கூடியது. இவ்வளவு ஏன் "இவங்க ரெண்டு பேர்த்தயும் ஸ்கூலோட நிறுத்திரலாம். படிக்க வெச்சு என்ன ஆகப் போகுது?" என்று சொன்ன தாத்தா கூட முதல் ஆளாக ஏறிக் கொண்டார்.


எங்கள் வீட்டில் அனைவரும் அதீத பக்திமான்கள். எவ்வளவு என்றால்...


சும்மா இருக்கோமா? கோவிலுக்கு போகலாம்.


சும்மா இருக்க முடியலையா? அப்பவும் கோவிலுக்கு போகலாம்.


அவ்வளவு. 


அதனாலேயே எனக்கு ஒரு ஒவ்வாமை இந்த பக்தியுடன். 


இவர்களுடன் எந்த பாதையில் எப்போது பயணித்தாலும் முதல் இலக்கு ஒரு கோவிலாக தான் இருக்கும். அப்படித்தான் மைசூர் செல்லும் வழியில் ஒரு கோவிலை சென்றடைந்தோம். அங்கே தரிசனம் முடித்து விட்டு தான் மறுவேலை என்று காலை 5 மணிக்கே ஆரம்பித்து விட்டார்கள். "அடேய், அந்த ஆபிஸ்ல போய் நேரத்துக்கு சேந்தா தான்  அவளுக்கே வேலை!" என்பதாக இருந்தது என் மைண்ட் வாய்ஸ்.


"கூட்டம் கம்மியா தான் இருக்கு, எப்டியும் ஈஸியா 2 மணி நேரத்துல சாமி பாத்தரலாம்" என்று அவர்கள் பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்த போதே முடிவு செய்து விட்டேன். நான் அவர்களுடன் செல்லப் போவதில்லை என்று. நான் தீவிர கடவுள் மறுப்பில் இருந்த காலம் அது.


"நா வரல.. நீங்க போயிட்டு வாங்க.."


"வரலையா.. எங்க போக போற?"


"எங்கயும் போகல.. இங்க அப்டியே சும்மா போட்டோ எடுத்துட்டு இருக்கேன்." நான் புதிதாக அப்போது தான் ஒரு கேமரா வாங்கியிருந்தேன்.


"நீ அதுக்கா வந்த.. உள்ள போயிடு வரலாம் வா.."


"நீங்க இதுக்கா வந்தீங்க? ஆபிஸ் போலாம் வாங்க.."


இது திருந்தாது என்பது போல பார்த்து விட்டு அனைவரும் கோவிலுக்குள் சென்றனர். நான் என் கேமராவை தூக்கிக் கொண்டேன்.



ஒரு அரை மணி நேரம் கோவிலை சுற்றி சுற்றி வளைத்து வளைத்து எடுத்திருப்பேன். அனைத்து புகைப்படங்களும் ஒரே மாதிரி தான் இருந்தன. சரி, நம்ம கிரியேட்டிவிட்டி அவ்வளவு தான் போல என்று டீயை வாங்கி கொண்டு ஒரு கல் பெஞ்சில் அமர்ந்தேன். அதுவும் இரண்டு நிமிடங்களில் முடிந்தது. இன்னொரு டீ வாங்கிரலாமா என்று வெறும் கப்பை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அருகில் நிழலாடியது.


ஒரு நடுத்தர வயதுள்ள நபர் கொஞ்சம் தள்ளி அதே பெஞ்சில் அமர்ந்தார். கண்ணை மூடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அவர் லிப் மூவ்மெண்டை வைத்து என்ன சொல்கிறார் என்று அறிந்து கொள்ளும் முயற்சியில் அவரை உன்னிப்பாக கவனித்தேன். அதை எப்படியோ உணர்ந்த அவர் தவம் களைந்த முனியைப் போல் என்னைப் பார்த்தார். அந்த சங்கடத்தை மறைக்க சிரித்து வைத்தேன். அவர் முகம் கனிவாக மாறியது.


"எந்த ஊர்?" கன்னடமும் ஆங்கிலமும் கலந்து வந்தது அந்த கேள்வி.


"திருப்பூர்"


"போட்டோக்ராபரா? போட்டோ எடுக்க வந்துருக்கீங்களா?"


"இல்ல.. வீட்ல இருந்து வந்துருக்காங்க.. கோவிலுக்கு உள்ள போயிருக்காங்க..." என்றேன் அதே கன்னடமும் ஆங்கிலமும் கலந்து. என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இது. ஒரு மொழி ஒழுங்காக தெரியவில்லை என்றால் அது தெரியாது என்று சொல்லி விட என் ஈகோ என்றும் ஒத்துழைத்தது இல்லை. அதை தவறாக பேசி அவர்களே புரிந்து கொள்ளும் வரை நான் விட்டதே இல்லை. அவர் கெட்டிக்காரர் அந்த ஒரு கேள்வியிலேயே புரிந்து கொண்டார். ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அவர் ஆங்கிலம் அவ்வளவு சரளமில்லை. ஆனால், என் கன்னடம் அளவிற்கு மோசமில்லை.


"ஓ.. அவளோ தூரத்துல இருந்து வந்துருக்கீங்களா?"


"ஆமா..." 


"நாங்களும் தூரத்துல இருந்து தான் வந்துருக்கோம். நார்த் கர்நாடகால இருந்து.." அவர் சொன்ன ஊர் பெயரை சத்தியமாக மறந்து விட்டேன்.


"ஓ.." இப்படியாக இரண்டு மூன்று ஓ போட்டு விட்டு நகர்ந்து விடலாம் என்று தான் யோசித்திருந்தேன். அப்போது தான் அவர் தன் பிரச்சனையை சொல்ல ஆரம்பித்தார். உண்மையில் மிக அசௌகர்யத்துடன் தான் கேட்க ஆரம்பித்தேன்.


இன்னொரு முக்கியமான விஷயம். பொதுவாக ஆண்கள் அதிகமாக எதையும் பகிரமாட்டார்கள், திறந்த புத்தகமாக இருக்கமாட்டார்கள் என்றொரு கருத்துண்டு. அதற்கு ஒரு நேரெதிர் தியரி நான் வைத்திருக்கிறேன். தெரியாத ஒரு ஆணிடம் நீங்கள் சுமார் 20 நிமிடம் பேச்சு கொடுக்க நேரிட்டால் அவர்களின் வாழ்வின் ஒரு முக்கியமான நிகழ்வை அல்லது பிரச்னையை உங்களிடம் கூறியிருப்பார்கள். ஆண்கள் பொதுவாக தனிமையானவர்கள். தங்களுக்குள் இருப்பவற்றை தனிமை என்னும் கயிறைக் கொண்டு இறுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அந்த கயிற்றின் இறுக்கத்தை தளர்த்த ஒரு கால் மணி நேர உரையாடல் போதுமானதாக இருக்கிறது. நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ளவே போவதில்லை என்கிற ஒரு தைரியம் கூட காரணமாக இருக்கலாம். இதற்கு நாம் பார்க்க போகும் இந்த உரையாடல் மட்டும் உதாரணம் அல்ல. இப்படித்தான் நான் ஒரு ஆட்டோ டிரைவருடன் அரை மணி நேரம் பயணிக்க நேர்ந்தது. அந்த நேரத்துக்குள் அவர் கள்ள காதல் கதையை சொல்லிவிட்டார். கள்ள காதல் என்றவுடன் உங்கள் புருவம் உயர்வதை உணர முடிகிறது. ஆனால், அதை இன்னொரு நாள் சொல்கிறேன். நம் கதைக்கு வருவோம்.


அதற்கு முன் ஒரு எச்சரிக்கை. என் தியரியை வைத்துக் கொண்டு யாரிடமும் எதையும் உளறி வைக்காதீர்கள். அனைவரும் என்னைப் போல நல்லவனாக இருக்க போவதில்லை(?!). ஸாரி, நான் பார்த்தவர்கள் போல.



"நானும் என் பொண்டாட்டியும் தான் வந்துருக்கோம்." என்றார் சற்றே தோய்ந்த குரலில்.


"ஓ.."


"எங்களுக்கு ரொம்ப நாளா கொழந்தை இல்ல... அப்படியா?"


"அப்படியா?" நான் வற்புறுத்தி வரவழைத்த ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்.


"ஆமா... எங்க ஊரு கிளைமேட்டுக்கு எல்லாருக்கும் லேட்டா தான் பொறக்கும்.."


`இவ்வளவு சயின்ஸ் பேசற ஆள் கொழந்த பொறக்கலனு ஏன் கோவிலுக்கு வரான்` என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே "உங்க ஊர்ல எல்லாம் சீக்கிரம் பொறந்துரும் ல?" என்று கேட்டார்.


இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. "ஆமா.. அப்படி தான் இருக்கும்.  சில பேருக்கு சீக்கிரம் பொறக்கும், சிலருக்கு லேட் ஆகும்" என்று மேம்போக்காக எதையோ உளறி வைத்தேன். அவரை சோர்வடைய வைக்கும்படி எதையும் சொல்லி விடக் கூடாது என்பது மட்டும் என் பின்மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.


"ஓ.. சரி.. எங்களுக்கும் இவ்வளவு லேட்டா ஆகும்னு நெனைக்கல. எல்லா டாக்டரையும் பாத்தாச்சு எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்க.. வேற என்ன பண்றதுனு தெரியல.எனக் ஊருல நெறய பேரு இந்த கோவில் ரொம்ப சக்தி வாய்ந்ததுனு சொன்னாங்க. அதான் இந்த கோயிலுக்கு வந்துருக்கோம்."


"சரிங்க.."


"நீங்க அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கீங்க.. அப்போ இந்த சாமி ரொம்ப சக்தி வாய்ந்தது தானே? எங்களுக்கு கொழந்த பொறந்துரும் ல?" என்றார்  ஒரு வித ஆவலுடன்.


எனக்கு சில நிமிடங்கள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பொதுவாக இப்படியான ஒரு கேள்வி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் தொடுக்கப்பட்டிருந்தால் 'அது எப்படி கோயிலுக்கு போனா எல்லாம் சரி ஆகும்?' என்று விதண்டாவாதமாக ஏதாவது கேட்டிருப்பேன். எனக்கு கடவுள் சார்ந்து இருக்கும் மக்களின் மேல் கோபமே 'நான் எதும் பண்ணலைனாலும் கடவுள் பாத்துப்பார், நான் எந்த தப்பு பண்ணுனாலும் கடவுள் பாத்துப்பார்' என்கிற போக்கு தான். அதை வைத்து தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வருத்திக் கொள்வதும் என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கடவுள் வியாபாரமாக்கப்பட்டதும் அரசியலாக்கப்பட்டதும் அதை விட வேதனைக்குரியது. ஆனால், இங்கே ஒருவர் தனக்கும் தன் மனைவிக்கும் ஆசையான ஒன்றிற்காக அலைந்து திரிந்து கடைசியில் நம்பிக்கையை மட்டுமே வைத்திருக்கும்போது. அந்த நம்பிக்கை கடவுளாக இருப்பதில் தவறில்லை என்றே பட்டது. 


"ஆமா, ரொம்ப சக்தி வாய்ந்த சாமின்னு தான் எங்க வீட்ல எல்லாரும் வந்துருக்காங்க.." அவர் முகத்தில் அப்படியொரு பிரகாசம். "உங்களுக்கு கண்டிப்பா சீக்கிரம் கொழந்தை பொறக்கும்.." என்றேன் சிரித்த முகத்தோடு. அவர் முகத்திலும் அதே சிரிப்பு.



இந்த சம்பவம்  முடிந்த சிறிது நேரத்தில் எனக்கு தோன்றியது. 'அடடா, நாம நம்பாத ஒரு விஷயத்த நம்பற மாரி சொல்லிட்டோமே' என்று தான். ஆனால், அவர் நம்பிக்கையை குலைக்காமல் இருக்க இப்படி செய்தது திருப்தியாக தான் இருந்தது. அதே சமயம், ஒரு தெரியாத நபர் என்பதால் நின்று யோசித்த நான், நெருக்கமானவர்களின் நம்பிக்கையை கண்டிப்பாக உதாசீனப்படுத்தி இருப்பேன்.நாம் எடுத்துக்கொள்ளும் உரிமைகளுக்கு இடையில் நம்பிக்கைகளுக்கு இடமில்லை போலும்.


இதெல்லாம் சரி, கடவுள் இருக்காரா இல்லையானு சொல்லு என்கிறீர்களா?



இன்னுமா உங்களுக்கு புரியவில்லை. கடவுள் ஒரு நம்பிக்கை கொடுப்பவர் தான். இந்த கதையில் நம்பிக்கை கொடுத்த நான் தான் கடவுள் - அஹம் ப்ரம்மாஸ்மி!

For some reason, I always thought that the trek and rain can’t go together. This trip smacked me hard in the head to make me realise that isn’t true. We always worry about the rain being the spoiler for any trip. Ironically or let’s just say true to its nature, rain made this trip really special.


I have already been to Kodachadri several years back in the month of December. But, I read a quote somewhere that made me decide to go for this trip. That goes something like this.


“If you want to completely enjoy a place, don’t just go there in its best season but also in every other season. Just like how we get to see joy, anger, amusement, awkwardness, boredom in a person before we get close to them.”


I already did the hard part by visiting Kodachadri in the dry winter season. Monsoon is the best season to experience its joy. How can I miss it? The icing on the cake is that I planned my trip with Coimbatore adventure club whom I have heard a lot about but never got a chance to travel with. The biggest challenge in planning any offbeat trip is that you don’t find them with any travel groups as most of them are commercialised and if you travel by yourself, you have to take care of a lot of things. Believe me, I have not been there in a good way. CAC solved that problem for me. They kept us away from crowds and close to nature for most parts of the trip.


It all started with a train journey, my most comfortable mode of transportation. Maybe I got too comfortable or it was because of my tightly packed friday, I slept throughout the to journey missing out the rant session from my fellow travellers. It was of course a costly miss. Because listening to people’s stories is always my favourite part of any trip. Since I got to hear them for the next two days, it kind of consoled me.


The stay was in a farm that was surrounded by trees and trees only. It felt like we were in a green cocoon with a super pleasant host who even made a special dish for us when we were about to leave.




Our first visit was to Nagara fort which was such a scenic location and made me reminisce about a lot of movies. Oh, I forgot to say this. It was raining on and off right from the time we got off the train. I naively wondered how we were going to visit any place in that weather. Coming back to Nagara fort, I got out with my awkward poncho which made me look like I came straight out of the Harry Potter universe as mentioned by some of the friends. That was when my liking for green showed its true colour(pun intended!). It was green everywhere. But the rain made it much more beautiful.


Everyone was enjoying in the present and got lost in their own world. Both at the sametime. I always remember places by mapping people with it. He did this here and she did that there was easy for my mind to capture. There were so many moments like that in Nagara fort. But, there was one aberration. My curiosity led me towards a cave where I accidentally intruded on a couple's intimate moment who wasn’t even travelling with us. They would have cursed me for sure. Maybe I am going to die alone.





Our next destination, the trek, was the heart of the trip. Before we started trekking, we had to go through what they rightly call a washing machine drive. The jeeps and the drivers did show their 360 degree skills until the point where the axle in one of the jeeps broke down. As we ascended towards the trek start point, the mist started to make love with the greeneries like the milk gets into black tea to complement each other.



After we started trekking, it was all magic. As we went through lush greens of the forests, I felt like a car going into a car wash coming out cleansed and feeling fresh. I was no longer interested in wearing the Harry Potter poncho. I started embracing the raindrops true to their worth. Once you get drenched in rain, there is no going back to raincoats or umbrellas. The trek path was filled with streams that talked, trees that breathed, rocks that listened and the mist that saw us experiencing the beauty. Oh yeah, there were leeches that crawled into the bodies. I know I am getting a little cheesy here but the blame is on nature as I fall short of words to describe what I went through.




As for the trip, I am always fortunate to travel with cool trek leaders. He was a jovial naturalist who balanced the coordination and the fun part beautifully. If not for the people like him, I would have ended up hating trekking. The whole bunch was super energetic. When I look back now, I would have come across as the person who was weirdly silent for them. Thanks to my ambivert nature.



Two things that were constant throughout the trip other than greenery was music and photoshoots. It is always nice to see people who listen to the same kind of music as you are. I was fortunate in that aspect. Even a morning walk was filled with such soulful music and the tired return journey was filled with beats of dance. People never minded the rain to get their photoshoots done everywhere. That was refreshing to see for a boy who loves photographs. I even met a guy who was crazy enough to go topless(!) to get a photo in the rainy Kodachadri peak.The things that people do for photos!



During our return journey, we ended up on an unexpected ferry ride. That is when I thought to myself even unfinished bridges do greater things than finished ones. If you are around Mangalore/Udupi, don’t miss out on tasting the sea food.





This was my monsoon trek but definitely not going to be the last one. The warmth that I got in the rain is something that I am not going to forget. To cherish this, I am going to go ahead with another cheesy narration. Usually whenever I want to get drenched in rain, my mom will say “சளி புடிக்கும் (You will get cold)”. Hereafter I have a reply for her,


“சளி புடிக்கும், ஆனா மழ அதவிட எனக்கு புடிக்கும்”


Loosely translated as ‘probably I will get cold, more than that I want to get the rain’. Maybe this is what I am going to take away from this trip





“What is it with him? He won’t reply to messages. He won’t attend calls regularly and won’t even bother calling us back. But, he wants to send postcards as if he is a social animal.”


This is what so many people who know me well would have thought  when I said I wanted to send postcards to people I know. Even I would have thought the same if I were in their place. Thanks to the social quadrant of my mind. It always works weirdly. It was just a little trigger that made me write those postcards. I am hoping to write more, let that be. We should travel a little while back to 2019 to understand a bit more about the trigger.


2019 was kind of a revelation for me. Two major things happened in my life. One, I joined my current organisation and the other, as I already gloated enough, I did my first himalayan trek. Apart from the economical, physical and all other million aspects of those two things, meeting the people that I know today would have to be the collection of moments that tilted my world to a better direction. Both things had an equal impact in the birth of these postcards.


The people I met in my organisation taught me the importance of empathy and consent. If not for them, I would have sent the same postcards to the people without asking them if they even wanted to receive one. My intention could have been to surprise them. But, may be that could not have been received well. All surprises are not good surprises. Well, for the empathy part, I was thinking about how the postcard could brighten up them even if it is for a few minutes when I was writing them. Imagine yourself being in a random place either a foreign land, a relative’s home or wherever and surrounded by too many random people whom you couldn’t get along with. Suddenly you meet a person who calls you by your name and talks with you for a few seconds even if it’s some customary exchange. He/She may be an acquaintance, a friend or a ‘I met you somewhere’ person. But, it will ease you up for a while right? At least I will feel so. I wanted to bring the same feeling to the people to whom I send those postcards. Again, this was only a chain reaction of the trigger that I was talking about.


Now coming to the main trigger, I have talked and wrote a lot about my himalayan trek. So, I am not going to bore you with those details again. But that was when I met Pranav. He was our trek leader. His motivation was one major factor that made me and even some of my fellow trekkers to complete the trek. He was jovial, inspiring and a lot more for one to look up to. At the end of our trek, he gave each of us two postcards and told us to write it to him or friends as per our wish. He was a lover of personalised notes as he quoted that he would even print some of the text messages and paste it in a notebook if it meant to him. I did send a personalised note to him but on whatsapp. I completely forgot about the postcards and I was not even in touch with him frequently.


Fast forwarding to October 2021, I received the news of his death while trekking somewhere in Maharastra. I couldn’t digest it and hoped it to be a rumour and would be some other Pranav. It wasn’t. I felt bad for a couple of days and moved on. This is what I don’t like with all deaths - we all become helpless and would not be able to do anything else to change the situation. But again, that’s what a life is. Even then I never remembered anything about the postcards.


December 2021, when I was packing for my recent trip, I wanted to reuse some of the items that I bought in 2019. That’s when I found those postcards. And that was the trigger. I had a little breakdown of sorts. I really don’t know what was that about whether it was Pranav’s death, the inevitable uncertainty or whatever. That’s when I decided I should send some postcards to people who would want it. People, who are close to me, know that I am a sucker for handwritten notes and I used to send letters sometime back. So, in a way, it was my homecoming.



After my trip, the same idea turned out to be printing the postcards with the photos that I have taken to give some more personalised touch. Still there might be questions about this whether it is a remembrance of Pranav, it is an initiative to encourage writing, it is to show my kindness or something else. Honestly, I don’t know. It is yours to interpret. But I can say that I am selfish enough to brag about the smiles that I brought to a few people through the postcards (from the responses that I got). In a world full of uncertainties, I wanted to be that one happy uncertainty even if it lasts for a few seconds. That’s what I think.

 எங்கள் வீட்டில் எனக்கு அடிக்கடி சொல்லப்படும் கதைகளில் இதுவும் ஒன்று. நான் பிறந்த போது மருத்துவமனையில் இருந்த அனைத்து நர்ஸ்களும் என்னை பாசமாக கொஞ்சியதாகவும், அதன் பிறகு எங்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் அங்கு சென்ற போது அவர்கள் என்னைப் பற்றி விசாரித்ததாகவும் சொல்வார்கள். இதை முதன்முறையாக நான் கேட்ட போது இதில் இருந்த கற்பனைத் தன்மையை ஆராய என் மனம் முன்வரவில்லை. அன்றிலிருந்தே முகம் தெரியாத அவர்களின் அன்பை எண்ணி எனக்கு நானே சிலிர்த்துக் கொள்வேன். எனக்கு நர்ஸ் என்றாலே ஒரு விவரிக்க முடியாத அன்பு உண்டாக அது ஒரு முக்கிய காரணம்.

சிலர் இப்படிக் கூறி கேள்விப்பட்டதுண்டு. "நான் மாத்திரை எவ்வளவு வேணும்னாலும் எடுத்துப்பேன். ஆனா, ஊசி மட்டும் போட்டுக்க மாட்டேன் ". நான் அப்படியே நேரெதிர். அதற்கு காரணம் கூட எனக்கு நர்ஸ்கள் மீதான அன்பு தான் என நினைக்கிறேன். அவர்கள் முகத்தில் இருக்கும் கனிவு ஊசிகளின் வலிகளை பொருட்படுத்த விடுவதில்லை.
அப்பாவுக்கு உடல் நலமில்லாத ஒரு தருணத்தில் அவருடன் நான் மருத்துவமனையில் தங்கியிருக்க நேர்ந்தது. அப்பொழுது தனி அறைக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டில் இன்னொரு இளம்வயது பையனுடன் அறையை பகிர்ந்து கொண்டிருந்தோம். அவர் காலேஜ் முதல் வருடம் சேர போகும் மாணவன் என்று சில உரையாடல்களின் வாயிலாய் அறிந்திருந்தேன். அவர் காஸ்மெட்டிக் சர்ஜரி எனப்படும் ஒரு வித அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் காதுமடல் சற்று மடங்கியிருந்த காரணத்தினால் அதை சரி செய்வதற்காக அந்த அறுவை சிகிச்சை. அடுத்த நாள் அறுவை சிகிச்சை என்கிற நிலைமையில் அந்த அறைக்கு அவ்வப்போது வரும் ஒரு ட்யூட்டி நர்ஸ் அவருடன் பேசிக் கொண்டதைக் கேட்க நேர்ந்தது.
"டேய், உன் காது இப்டியிருக்குனு சர்ஜரி பண்ணனுமா? இது கடவுள் குடுத்த வரம் டா. இது வேண்டாம்னு உங்க அப்பா கிட்ட சொல்லு டா. ப்ளீஸ் டா..! " என்றார் இனிமையுடன் கலந்த உரிமையோடு.
"அப்பா கேப்பாரானு தெரியல கா.."
"இதெல்லாம் ஒவ்வொருத்தரோட இஷ்டம் நான் சொல்லவே கூடாது.. இருந்தாலும் ரொம்ப வலிக்கும் டா... உன்ன பாத்துக்க தான் நாங்க இங்க இருக்கோம் இருந்தாலும் உங்க அப்பா கிட்ட சொல்லிப் பாரு செரியா ?"
அந்த இரண்டு நிமிட உரையாடலில் அத்தனை கரிசனம். அவர் சொன்னது போன்றே அறுவை சிகிச்சை முடிந்து வலியால் துடித்த அந்த பையனை அவ்வளவு சிரத்தையாக கவனித்துக் கொண்டார் அந்த நர்ஸ். அங்கிருந்த அனைவரிடமும் அதே கனிவு. எனக்கே அறியாமல் அவர்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகி விட்டது.
"ட்ரிப்ஸ் முடியற மாறி இருந்த என்ன வந்து விளிக்கணும் கேட்டில்லோ?" என்று அவர் மலையாள தமிழில் பேசியபோது எனக்குள் அப்படியொரு பூரிப்பு.
"நான் விளிக்கும் சிஸ்டரே, நீ போய்க்கோ!" என்று மலையாளத்தில் பேசி என் அன்பை காட்டிவிட எனக்கும் ஆசை தான். ஆனால், இந்த மாதிரி எதிர்பாராத உரையாடல்களில் வார்த்தைகள் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. நான் "ம்ம்ம்.." என்று தலையாட்டிவிட்டதில் இன்னுமே என் மீது எனக்கே கோபம். நர்ஸ்கள் மீதான என் அன்பை எப்போதும் வெளிப்படுத்த முடிவதில்லை என்கிற அங்கலாய்ப்பு. அதன் உச்சமே இந்த பதிவு.
நேற்று கூட நான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்றிருந்த போது "அவ்வளவா வலிக்காது செரியா, டக்குனு முடிஞ்சுரும்.." என்றது எப்போதுமே நான் கண்ட கனிவான நர்ஸ் முகம். அப்போது எனக்கு தோன்றிய சிந்தனை இது. நாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்பட்சத்தில் நமக்கு நெருக்கமானவர்களிடம் கூட வெறுப்பைக் காட்டி விடுவோம் வேலைப்பளுவைக் காரணம் கூறி. ஆனால், இவர்களால் மட்டும் எப்படி கனிவுடன் கூடிய சேவையைக் கொடுக்க முடிகிறது. நான் காணாத எத்தனையோ செவிலியர்கள் உலகின் பல மூலைகளில் இதை வாழ்நாள் முழுதும் செய்து வருகின்றனர். அதுவும் இப்படியொரு பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
நான் அடிக்கடி இப்படி நினைத்ததுண்டு, 'செவிலியர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்று. அந்தக் கருத்தை நானே மறுக்க விழைகிறேன். அவர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் தான் தேவதைகள்.

 தாத்தா இறந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. அவரின் மரணச் செய்தி வந்த கணத்திலிருந்து நான் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்று என்னாலே உணர முடியவில்லை. ஆழ்ந்த துயரமோ அடக்க முடியாத அழுகையோ இல்லை. ஆனாலும் ஒரு விதமான இறுக்கமான மனநிலை. அவரை அடக்கம் செய்த அன்று இரவே கூட சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியின் இழப்பை எண்ணி சற்று நேரம் அழுது கொண்டிருந்தேன்.

அவர் என்னைப் பாசமாக கொஞ்சியதாகவோ கடுமையாக திட்டியதாகவோ எனக்கு நினைவு இல்லை. எந்த விதமான உணர்வுகளையும் அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக்கொள்ளாத, தன்னை ஒரு அக்மார்க் alpha male ஆக நினைத்துக் கொண்டிருந்த ஆசாமி. அவர் கடைசி காலக்கட்டங்களில் என்னைப் பார்க்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கேள்விப்பட்டு அவரைப் பார்க்க செல்வேன். "வாடா!" என்று சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார். அவர் வேலை என்றால் சிகரெட் புகைப்பது, பழைய நாளிதழ்களைப் புரட்டுவது, வீதியில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்ப்பது. "இதுக்கு தான் என்ன வர சொன்னீங்களா?" என்று கேட்டுவிட தோன்றும். அப்படி உரிமையாக கேட்டுவிடக்கூட முடியாத மேம்போக்கான உறவு தான் எனக்கும் தாத்தாவிற்கும்.
தாத்தா ஒரு சரியான சரக்கு வண்டி. அவர் பதுக்கி வைத்திருந்த காலி மதுபாட்டில்களை கடத்திக்கொண்டு போய் கிரிக்கெட் பந்து வாங்குவதில் தொடங்கியது என் புரட்சி. அவரை ஏமாற்றிவிட முடிந்ததில் அப்படியொரு சந்தோஷம் அச்சமயத்தில்.
தற்போது தாத்தாவைப் பற்றி யோசித்தால் எனக்கு முக்கியமான இரண்டு சம்பவங்கள் உடனே ஞாபகத்திற்கு வருகின்றன.
நான் ஒரு சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரும் விபத்து நேர்ந்தது. பேருந்தில் இருந்த எங்களுக்கு பெரிதாக எதுவும் பாதிப்பில்லை என்றாலும் இன்னொரு வாகனமான காரில் வந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தும் காரும் மேம்பாலத்தில் மோதிக் கொண்டதில், கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்து நிகழ்ந்தது அந்த கோர சம்பவம். நல்ல வேளையாக பேருந்து ஓட்டுநர் கன்ட்ரோல் செய்து நிறுத்தியதில் நாங்கள் தப்பித்தோம். இதை நான் எங்கள் வீட்டில் சொல்லியிருந்தேன். தாத்தாவும் இதை அறிந்திருந்தார். அதே சம்பவத்தை அவர் இன்னொருவரிடம் கூறிக் கொண்டிருக்கையில் நான் கேட்க நேர்ந்தது. "பஸ்சும் காரும் மோதி பெரிய ஏக்சிடெண்ட். கார்ல இருந்தவங்க எல்லாம் உடனே அவுட்டு. பஸ் பாலத்துல தொங்கிற்றுந்துருக்கு. லோகேஸ் எல்லாம் ஏதோ கம்பிய புடிச்சு தொங்கிட்ருந்துருக்கான். அப்புறம் ஊர் மக்கள் தான் வந்து காப்பாத்திருக்காங்க..!" கதை சுவாரஸ்யத்திற்காக என் உயிரை ஊசலாட விட்டது எனக்கு பேரதிர்ச்சி தான். இருந்தாலும் அவரிடம் இருந்த கதை சொல்லல் தான் என்னிடம் ஒட்டிக்கொண்டதோ என்றொரு எண்ணமும் உண்டு.
இன்னொரு சமயம் நான் புத்தகம் வெளியிட்டு வெகு சில நாட்களில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த சில உறவினர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது தாத்தாவும் அங்கிருந்தார். "நம்ம வீட்ல ஒரு பையன் இதெல்லாம் பண்றது ரொம்ப சந்தோஷம்.." என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கையில் நான் எதேச்சையாக தாத்தாவைப் பார்க்க நேர்ந்தது. என்னைப் பார்த்து மிகவும் பெருமையோடு சிரித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன்னதாகவோ பின்னதாகவோ நிச்சயமாக அவரிடம் இருந்து அப்படியொரு பார்வை கிடைக்கவில்லை. நான் விளையாட்டாக வெளியிட்ட புத்தகம் அது. அதற்கு மற்றவர்கள் பாராட்டும்போது பலமுறை சந்தோஷப்பட்டுள்ளேன். ஆனால், நான் பெருமையாக உணர்ந்த தருணம் அது மட்டுமே.
ஒரு வேளை இந்தப் பதிவை தாத்தா படிக்க நேர்ந்திருந்தால் தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருப்பார்!
எனக்கும் தாத்தாவிற்குமான உறவை நான் விவரிக்க முயல்கையில் எனக்கு ஆரண்ய காண்டம் படத்தில் வரும் ஒரு டயலாக்கின் மறு ஆக்கம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
"உனக்கு உங்க தாத்தா னா ரொம்ப புடிக்குமா?"
"அப்படி இல்ல. ஆனாலும், அவர் எங்க தாத்தா!"


பரியேறும் பெருமாள் படம் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரியும். கறுப்பியை தண்டவாளத்தில் கட்டி வைக்கும் முதல் காட்சியில் திரையில் மட்டுமின்றி அதை தாண்டியும் நம்முள் ஒரு விதமான பதைபதைப்பு நிறைந்திருக்கும். அதே மனநிலை மாரி செல்வராஜ் எழுதிய "அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்" என்ற சிறுகதையை படிக்கும் போதும் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு நாயின் பார்வையில் அதன் வாழ்வை பார்க்க நேரிட்டால் அது அப்படி தான் இருக்க முடியும் என்று நம்மை நம்ப செய்து விடுகிறது. சாதாரணமாகவே  நாய் என்ற சொல்லை நாம் இழிவுபடுத்த மட்டுமே கூற விழைகின்றோம். உதாரணமாக,


"அவன் ஒரு பரதேசி நாய்!"


"அவனைப்  பாத்தியா நாய் மாறி பொறுக்கிட்டு இருக்கான்"


"ஏண்டா நாய் மாறி சாப்பிட்ற ?"


இப்படியெல்லாம் சொல்வதை மிக சௌகரியமாக பழகிக் கொண்டோம். ஆனால், இதை அப்படியே மாற்றி நாயை ஒரு அப்பாவியான ஜீவனாய் முன்னிறுத்துவதில் தான் மாரி செல்வராஜ் மாறுபடுகிறார். கறுப்பியும் சுரேஷும் நம் கண்களை மட்டுமின்றி மனங்களையும் நிறைத்து விடுகிறார்கள். அவர்களை பார்க்கும்போதும் படிக்கும்போதும் தான் இதற்கு முன் நான் கடந்து வந்த எத்தனையோ கறுப்பிகளையும் சுரேஷ்களையும் திரும்பிப் பார்க்க தோன்றுகிறது. அந்த கதையில் வரும் சுரேஷ் இப்படி சொல்லியிருப்பான்.


'மாங்கொட்டாரத்தாளையும், ஐயாக்குட்டியையும் நான் தான் வெறி பிடித்து கடித்தேன் என்று சொல்வதை தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாங்கொட்டாரத்தாள் அந்த பல்லு போன பாழாப்போன கிழவி என் வாலை மிதித்து நசுக்கியதால் வலி பொறுக்க முடியாமல் கடித்துவிட்டேன். அந்த ஐயாக்குட்டி கண் தெரியாத கபோதி ஒரு ஓரமாய் படுத்திருந்த என் மீது பொத்தென்று விழுந்ததால் அவசரத்தில் பயந்து கடித்தேன். நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை அப்படி செய்யும் அளவுக்கு என் உடம்பில் எனக்கு திறனும் இல்லை. அப்புறம் அப்படி ஒரு கடிநாயாக நான் வளர்க்கப்படவுமில்லை. அதற்காக "நான் ஏதோ செத்துப்போன கழுதை கறியை தின்னுட்டு வந்து கோட்டி புடிச்சு எல்லாரையும் கடிக்கிறேன்னு இவர்கள் சொல்வது அபாண்டம்".'


(மன்னிக்கவும். நான் இதை இங்கு எழுத வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். இருந்தாலும், எழுதாமல் விட என் மனம் ஒப்பவில்லை. அதனால் சுருக்கமாக சொல்லி விடுகிறேன். சுரேஷ் கடித்ததும் 'கர்ணன்' திருப்பி அடித்ததும் எந்த விதத்திலும் மாறுபட்டுவிடவில்லை என்னைப் பொறுத்தவரையில்!)


ஒரு எளிமையான அப்பாவியின் பேரில் நம்மால் எவ்வளவு எளிதில் குற்றம் சுமத்தி விடமுடிகிறது. இதையும் இன்னொன்றையும் நான் உணர சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது.


அந்த இன்னொன்று என நான் கூறியது நா.முத்துக்குமார் சொன்ன இந்தக் கூற்று "நான் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை எதிர் வீட்டில் புறா வளர்ப்பவன் பறித்துக் கொள்கிறான்".


நான் எந்த செல்லப் பிராணியும் வளர்ப்பவன் அல்ல. எங்கள் வீட்டின் அருகில் சுற்றித் திரியும் கருவாச்சிக்கு அவ்வப்போது திண்பண்டங்கள் போடுவது உண்டு. 'கருவாச்சி' எந்த விதமான நிறவெறி காரணமுமின்றி அவளைப் போலவே அப்பாவியான எங்கள் வீட்டு பாப்பா வாஞ்சையுடன் வைத்த பெயர். இப்பொழுது கூட எங்கள் வீட்டுக் கதவின் முன்னால் காதுகளை மட்டும் தூக்கிக் கொண்டு படுத்திருக்கிறாள். அவள் என்னை துரத்தாமல் இருக்க லஞ்சமாக ஆரம்பித்த எங்கள் வீட்டு உணவும் திண்பண்டங்களும், நாளடைவில் அவளுக்கு அன்பான வாடிக்கையாகிவிட்டது. அப்படி ஒரு நாள் அவளுக்கு நான் பிஸ்கட்டுகள் போட்டுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ சில கற்கள் அவளை வந்து தாக்கியது. வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டு ஓடினாள் கருவாச்சி. அதிர்ச்சியில் கல் வந்த திசையில் நோக்கினேன் நான். நைட்டியை தூக்கி மடித்துக் கட்டியவாறு கையில் இன்னும் சில கற்களோடு ஆக்ரோஷமாக வந்து கொண்டிருந்தார் எங்கள் வீதி குடோன் அம்மா. எங்கேயோ ஓடி பயந்து பம்மிக்கொண்டிருந்த கருவாச்சியின் திசையில் கையில் இருந்த மீதி கற்களையும் வீசிவிட்டு கத்திக்கொண்டே அவர் வீட்டிற்கு திரும்பிச் சென்றார்.


"திருட்டு நாய் கோழிய எல்லாம் வந்து தூக்கிட்டு போயிருது நைட்டு ஆனா... ஊர் மேயற நாய்க்கு நம்ம வீதில என்ன வேல... இந்த...." அதற்கு மேல் அவர் பேசியது கேட்காத தூரம் சென்றிருந்தார். நிற்க. என்னை யாரென்றே அவருக்கு தெரியாது அதனால் அவர் திட்டியது என்னைப் பற்றியதாக இருக்க வாய்ப்புகள் குறைவே!


கருவாச்சி அவர்கள் வீடு வரையில் சென்று எவருமே பார்த்ததில்லை, இருந்தும் இப்படியொரு குற்றச்சாட்டு வந்தது வீதியில் இருந்த அனைவருக்குமே ஆச்சர்யம் தான். சில நாட்களுக்கு பின் தான் தெரிந்தது, அந்த மாயமான கோழிகளுக்கு காரணம் அவர்கள் வீட்டிற்கு ரெகுலராக வந்து சென்று கொண்டிருந்த ஆசாமி என்று. அதன் பிறகு அந்த குடோன் அம்மாவின் சத்தம் வீதியில் கேட்கவில்லை. 'ஒரு நாய் தூக்கிட்டு போயிருச்சே' என்கிற ஆதங்கம் அவருக்கு ஆறியிருக்குமோ என்னவோ. ஆனால், கருவாச்சியின் காயங்கள் ஆற சில தினங்கள் பிடித்தன.


கருவாச்சி எனக்கு உணர்த்திய இன்னொரு கூற்று "அம்மா னா யாருக்கு தான் புடிக்காது. நாய் பூனைக்குக் கூட தான் புடிக்கும்". இது புதுப்பேட்டை படத்தில் தனுஷ் பேசிய வசனம்.


கருவாச்சி மிக கெட்டிக்காரி. ஒரே பிரசவத்தில் ஐந்து குட்டிகள். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே தான் மொத்த குடும்பமும் தஞ்சம். குட்டிகள் வந்த பிறகு கருவாச்சி அவ்வளவாக சாப்பிடுவதில்லை. நாங்கள் பிஸ்கட்டுகளோ உணவோ கொடுக்கும்போது குட்டிகள் முண்டியடித்துக் கொண்டு சாப்பிடும்போது நடுவில் வராமல் வேடிக்கைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும் அன்பான அம்மாவாக மாறிவிட்டாள். அவளுக்கென தனியாக நாங்கள் ஏதாவது வைத்தாலும் குட்டிகள் அருகில் வந்துவிட்டால் சாப்பிடாமல் விலகி சென்றுவிடுகிறாள், விவரம் தெரியா குட்டிகளும் முழுவதையும் முக்கி விடுகின்றன. அம்மாக்கள் பட்டினி கிடப்பது இப்புவியின் சாபம் தான் போலும்.


இதைப் பற்றியெல்லாம் பேசும்போது எனக்கு ஜிக்கியின் ஞாபகம் வருகிறது. எனக்கு விவரம் தெரியாத வயதில் எங்கள் வீட்டிற்கு வந்தவன் தான் ஜிக்கி. எனக்கு ஞாபகம் இருப்பது எல்லாம் தன் கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடக்கவே முடியாமல் இருந்த ஜிக்கி. அப்படி இருந்தவனை எங்கள் வீட்டில் இருந்த அநேகம் பேரும் அருவருப்புடனே பார்த்தோம். எங்கேயாவது கொண்டு விட்டு விட வேண்டுமென்பதே அனைவரின் தீர்க்கமான முடிவு. அப்படி ஒரு நாள் அவன் கொண்டு செல்லவும் பட்டான். எனக்கு இருக்கும் நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளின் பட்டியலில் இப்பொழுது இதுவும் இணைகிறது. 'வாய்ப்பு கிடைத்தால் பரிதாபமாக எங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜிக்கியை பாசமாக ஒரு முறையாவது கொஞ்சி விட வேண்டும். அருவருப்பை மட்டுமே என் கண்களில் இருந்து பார்த்தவனுக்கு ஒரு இம்மி அளவு அன்பையாவது காட்டி விட வேண்டும்.'


 "இத மட்டும் சொல்றியே.. நாய கொஞ்சறவங்கள எல்லாம் பாத்ததே இல்லையா?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நிச்சயமாக பாசமழை பொழியும் பலரையும் எனக்கு தெரியும். என் நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் கூட குடும்பமாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பதிவு என்னைப் போன்ற அலட்சியவாதிகளுக்காக மட்டுமே எழுதியது. இந்த நேரத்தில் என்னையும் ஒரு நாயைப் போல எண்ணிக் கொஞ்சிய ஒரு பெண்ணைப் பற்றி கூற நினைக்கிறேன். என் கல்லூரித் தோழி என்னை அழைக்கும்போதெல்லாம் "நாயே" என்று கூறி தான் அழைப்பாள். அதில் ஒரு உரிமையும் கனிவும் எப்போதும் கலந்திருக்கும். இப்போதும் நாங்கள் எப்போதாவது பேசிக்கொள்ளும்போது அவள் அப்படி அழைப்பதுண்டு. அவள் என்னை "நாயே" என்றழைப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும். இப்போது இன்னும் பிடிக்கிறது!