இரவு 7 :30 மணி - பொள்ளாச்சி பேருந்து நிலையம் பொதுவாகவே பயணம் செய்வதென்றால் துள்ளிக்குதிக்கும் சத்யா , அன்று கனத்த இதயத்துடன் பிடிக்காத பயணத்திற்கு அளவான மேக்கப்பில் பிரயத்தனமாகி டவுன் பஸ்ஸில் வந்திறங்கினாள். அவள் பெங்களுரு கிளம்ப வேண்டிய நேரம் அது , பி.டி. பீரியட் முடிந்து வகுப்பிற்குள் செல்லும் மனநிலையில் அவள். காரணம், அவள் அம்மா அப்பாவுடன் கழித்த அந்த இரண்டு நாட்கள். எந்நேரமும் பேசிக் கொல்லும் அவளை பிரிவதில் அவள் அம்மாவிற்கும் வருத்தம் தான். ஆனாலும், வொர்க் பிரம் ...
பெசன்ட் நகர் பீச் - மாலை 6.30 மணி கடலை விற்பவரும் கடலைப் போடுவதை கடமையாய் கொண்டிருக்க, அதை வெறிக்க பார்த்துக் கொண்டு சில கூட்டம் அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. அதில் நாங்களும் ஒன்றாக ஒன்றிப் போயிருந்தோம். சென்னைக்கு எங்களின் முதல் விஜயம் என்பதை எங்கள் முகத்தைப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவிற்கு வாயைத் திறந்து சிலாகித்துக் கொண்டிருந்தோம்.வழக்கமாக சிங்கிள் என சொல்லிக் கொள்ளும் மொட்டை பையன்கள் வாங்கி உண்ணும் அதிகம் செலவாகாத பண்டங்களை வாங்கிக் கொறித்துக் கொண்டே சுற்றி வந்து கொண்டிருந்தோம். ...
"கொஞ்சம் உளறல்... கொஞ்சம் சிணுங்கல்.... ரெண்டும் கொடுத்தாய் நீ.. நீ.. நீ..!" என்று மாதவன் மீரா ஜாஸ்மினுடன் டிவியில் பாடிக்கொண்டிருக்க, அதன் முன் அமர்ந்து மைன்ட் வாய்சில் தன் காதலி மைதிலியுடன் பாடிக் கொண்டிருந்தான் அருண். அருகிலிருந்த மேஜையின் மீது வைத்திருந்த செல்போன் சிணுங்கியது. அச்சிணுங்கலை தந்தவள் நெஞ்சிற்கு பதிலாக கல்லை வைத்திருக்கும் அருணையே சிணுங்க வைக்கும் மைதிலி தான். 'இப்ப தான் அவள பத்தி நெனச்சுட்ருந்தேன். உடனே அவளே கூப்டுட்டா. எப்பதான் அவள பத்தி நெனைக்காம ...