Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

"கடவுள் இருக்கிறாரா?"


இக்கேள்வியை நான் பள்ளியில் படிக்கும் சமயத்தில் கேட்டிருந்தால், கண்டிப்பாக இருக்கிறார் என்றிருப்பேன். இதே சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தால் இல்லவே இல்லை என்று சண்டைக்கு கூட வந்திருப்பேன். 'சரி, இப்போ என்ன தான் டா சொல்ற?' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. அதை தெரிந்து கொள்ள நாம் சில வருடங்கள் பின் நோக்கியும், மைசூரை நோக்கியும் செல்ல வேண்டும். குத்துமதிப்பாக 5 ஆண்டுகள்.


என் தங்கை கல்லூரி முடிந்த கையுடன் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர மைசூர் வர சொல்லியிருந்தார்கள். குடும்பமாக ஒரு 6-7 பேர் வாடகைக் கார் வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து சென்றோம். ஆபிஸில் சேர எதற்கு இத்தனைப் பேர் என்ற ஒரு கேள்வி வரலாம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் செல்லப் பிள்ளையான என் தங்கை வீட்டில் இருந்து வெளியே சென்று தங்க ஆயத்தமாகும் முதல் பயணம். அந்த மென்சோகம் பயணம் தொடங்கும் முன்பே தொடங்கி விட்டது. அது கூடக்கூட அங்கே செல்லும் ஆட்களின் எண்ணிக்கையும் கூடியது. இவ்வளவு ஏன் "இவங்க ரெண்டு பேர்த்தயும் ஸ்கூலோட நிறுத்திரலாம். படிக்க வெச்சு என்ன ஆகப் போகுது?" என்று சொன்ன தாத்தா கூட முதல் ஆளாக ஏறிக் கொண்டார்.


எங்கள் வீட்டில் அனைவரும் அதீத பக்திமான்கள். எவ்வளவு என்றால்...


சும்மா இருக்கோமா? கோவிலுக்கு போகலாம்.


சும்மா இருக்க முடியலையா? அப்பவும் கோவிலுக்கு போகலாம்.


அவ்வளவு. 


அதனாலேயே எனக்கு ஒரு ஒவ்வாமை இந்த பக்தியுடன். 


இவர்களுடன் எந்த பாதையில் எப்போது பயணித்தாலும் முதல் இலக்கு ஒரு கோவிலாக தான் இருக்கும். அப்படித்தான் மைசூர் செல்லும் வழியில் ஒரு கோவிலை சென்றடைந்தோம். அங்கே தரிசனம் முடித்து விட்டு தான் மறுவேலை என்று காலை 5 மணிக்கே ஆரம்பித்து விட்டார்கள். "அடேய், அந்த ஆபிஸ்ல போய் நேரத்துக்கு சேந்தா தான்  அவளுக்கே வேலை!" என்பதாக இருந்தது என் மைண்ட் வாய்ஸ்.


"கூட்டம் கம்மியா தான் இருக்கு, எப்டியும் ஈஸியா 2 மணி நேரத்துல சாமி பாத்தரலாம்" என்று அவர்கள் பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்த போதே முடிவு செய்து விட்டேன். நான் அவர்களுடன் செல்லப் போவதில்லை என்று. நான் தீவிர கடவுள் மறுப்பில் இருந்த காலம் அது.


"நா வரல.. நீங்க போயிட்டு வாங்க.."


"வரலையா.. எங்க போக போற?"


"எங்கயும் போகல.. இங்க அப்டியே சும்மா போட்டோ எடுத்துட்டு இருக்கேன்." நான் புதிதாக அப்போது தான் ஒரு கேமரா வாங்கியிருந்தேன்.


"நீ அதுக்கா வந்த.. உள்ள போயிடு வரலாம் வா.."


"நீங்க இதுக்கா வந்தீங்க? ஆபிஸ் போலாம் வாங்க.."


இது திருந்தாது என்பது போல பார்த்து விட்டு அனைவரும் கோவிலுக்குள் சென்றனர். நான் என் கேமராவை தூக்கிக் கொண்டேன்.



ஒரு அரை மணி நேரம் கோவிலை சுற்றி சுற்றி வளைத்து வளைத்து எடுத்திருப்பேன். அனைத்து புகைப்படங்களும் ஒரே மாதிரி தான் இருந்தன. சரி, நம்ம கிரியேட்டிவிட்டி அவ்வளவு தான் போல என்று டீயை வாங்கி கொண்டு ஒரு கல் பெஞ்சில் அமர்ந்தேன். அதுவும் இரண்டு நிமிடங்களில் முடிந்தது. இன்னொரு டீ வாங்கிரலாமா என்று வெறும் கப்பை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அருகில் நிழலாடியது.


ஒரு நடுத்தர வயதுள்ள நபர் கொஞ்சம் தள்ளி அதே பெஞ்சில் அமர்ந்தார். கண்ணை மூடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அவர் லிப் மூவ்மெண்டை வைத்து என்ன சொல்கிறார் என்று அறிந்து கொள்ளும் முயற்சியில் அவரை உன்னிப்பாக கவனித்தேன். அதை எப்படியோ உணர்ந்த அவர் தவம் களைந்த முனியைப் போல் என்னைப் பார்த்தார். அந்த சங்கடத்தை மறைக்க சிரித்து வைத்தேன். அவர் முகம் கனிவாக மாறியது.


"எந்த ஊர்?" கன்னடமும் ஆங்கிலமும் கலந்து வந்தது அந்த கேள்வி.


"திருப்பூர்"


"போட்டோக்ராபரா? போட்டோ எடுக்க வந்துருக்கீங்களா?"


"இல்ல.. வீட்ல இருந்து வந்துருக்காங்க.. கோவிலுக்கு உள்ள போயிருக்காங்க..." என்றேன் அதே கன்னடமும் ஆங்கிலமும் கலந்து. என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இது. ஒரு மொழி ஒழுங்காக தெரியவில்லை என்றால் அது தெரியாது என்று சொல்லி விட என் ஈகோ என்றும் ஒத்துழைத்தது இல்லை. அதை தவறாக பேசி அவர்களே புரிந்து கொள்ளும் வரை நான் விட்டதே இல்லை. அவர் கெட்டிக்காரர் அந்த ஒரு கேள்வியிலேயே புரிந்து கொண்டார். ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அவர் ஆங்கிலம் அவ்வளவு சரளமில்லை. ஆனால், என் கன்னடம் அளவிற்கு மோசமில்லை.


"ஓ.. அவளோ தூரத்துல இருந்து வந்துருக்கீங்களா?"


"ஆமா..." 


"நாங்களும் தூரத்துல இருந்து தான் வந்துருக்கோம். நார்த் கர்நாடகால இருந்து.." அவர் சொன்ன ஊர் பெயரை சத்தியமாக மறந்து விட்டேன்.


"ஓ.." இப்படியாக இரண்டு மூன்று ஓ போட்டு விட்டு நகர்ந்து விடலாம் என்று தான் யோசித்திருந்தேன். அப்போது தான் அவர் தன் பிரச்சனையை சொல்ல ஆரம்பித்தார். உண்மையில் மிக அசௌகர்யத்துடன் தான் கேட்க ஆரம்பித்தேன்.


இன்னொரு முக்கியமான விஷயம். பொதுவாக ஆண்கள் அதிகமாக எதையும் பகிரமாட்டார்கள், திறந்த புத்தகமாக இருக்கமாட்டார்கள் என்றொரு கருத்துண்டு. அதற்கு ஒரு நேரெதிர் தியரி நான் வைத்திருக்கிறேன். தெரியாத ஒரு ஆணிடம் நீங்கள் சுமார் 20 நிமிடம் பேச்சு கொடுக்க நேரிட்டால் அவர்களின் வாழ்வின் ஒரு முக்கியமான நிகழ்வை அல்லது பிரச்னையை உங்களிடம் கூறியிருப்பார்கள். ஆண்கள் பொதுவாக தனிமையானவர்கள். தங்களுக்குள் இருப்பவற்றை தனிமை என்னும் கயிறைக் கொண்டு இறுக்கி வைத்துக் கொள்கிறார்கள். அந்த கயிற்றின் இறுக்கத்தை தளர்த்த ஒரு கால் மணி நேர உரையாடல் போதுமானதாக இருக்கிறது. நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ளவே போவதில்லை என்கிற ஒரு தைரியம் கூட காரணமாக இருக்கலாம். இதற்கு நாம் பார்க்க போகும் இந்த உரையாடல் மட்டும் உதாரணம் அல்ல. இப்படித்தான் நான் ஒரு ஆட்டோ டிரைவருடன் அரை மணி நேரம் பயணிக்க நேர்ந்தது. அந்த நேரத்துக்குள் அவர் கள்ள காதல் கதையை சொல்லிவிட்டார். கள்ள காதல் என்றவுடன் உங்கள் புருவம் உயர்வதை உணர முடிகிறது. ஆனால், அதை இன்னொரு நாள் சொல்கிறேன். நம் கதைக்கு வருவோம்.


அதற்கு முன் ஒரு எச்சரிக்கை. என் தியரியை வைத்துக் கொண்டு யாரிடமும் எதையும் உளறி வைக்காதீர்கள். அனைவரும் என்னைப் போல நல்லவனாக இருக்க போவதில்லை(?!). ஸாரி, நான் பார்த்தவர்கள் போல.



"நானும் என் பொண்டாட்டியும் தான் வந்துருக்கோம்." என்றார் சற்றே தோய்ந்த குரலில்.


"ஓ.."


"எங்களுக்கு ரொம்ப நாளா கொழந்தை இல்ல... அப்படியா?"


"அப்படியா?" நான் வற்புறுத்தி வரவழைத்த ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்.


"ஆமா... எங்க ஊரு கிளைமேட்டுக்கு எல்லாருக்கும் லேட்டா தான் பொறக்கும்.."


`இவ்வளவு சயின்ஸ் பேசற ஆள் கொழந்த பொறக்கலனு ஏன் கோவிலுக்கு வரான்` என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே "உங்க ஊர்ல எல்லாம் சீக்கிரம் பொறந்துரும் ல?" என்று கேட்டார்.


இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. "ஆமா.. அப்படி தான் இருக்கும்.  சில பேருக்கு சீக்கிரம் பொறக்கும், சிலருக்கு லேட் ஆகும்" என்று மேம்போக்காக எதையோ உளறி வைத்தேன். அவரை சோர்வடைய வைக்கும்படி எதையும் சொல்லி விடக் கூடாது என்பது மட்டும் என் பின்மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது.


"ஓ.. சரி.. எங்களுக்கும் இவ்வளவு லேட்டா ஆகும்னு நெனைக்கல. எல்லா டாக்டரையும் பாத்தாச்சு எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்க.. வேற என்ன பண்றதுனு தெரியல.எனக் ஊருல நெறய பேரு இந்த கோவில் ரொம்ப சக்தி வாய்ந்ததுனு சொன்னாங்க. அதான் இந்த கோயிலுக்கு வந்துருக்கோம்."


"சரிங்க.."


"நீங்க அவ்ளோ தூரத்துல இருந்து வந்துருக்கீங்க.. அப்போ இந்த சாமி ரொம்ப சக்தி வாய்ந்தது தானே? எங்களுக்கு கொழந்த பொறந்துரும் ல?" என்றார்  ஒரு வித ஆவலுடன்.


எனக்கு சில நிமிடங்கள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பொதுவாக இப்படியான ஒரு கேள்வி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் தொடுக்கப்பட்டிருந்தால் 'அது எப்படி கோயிலுக்கு போனா எல்லாம் சரி ஆகும்?' என்று விதண்டாவாதமாக ஏதாவது கேட்டிருப்பேன். எனக்கு கடவுள் சார்ந்து இருக்கும் மக்களின் மேல் கோபமே 'நான் எதும் பண்ணலைனாலும் கடவுள் பாத்துப்பார், நான் எந்த தப்பு பண்ணுனாலும் கடவுள் பாத்துப்பார்' என்கிற போக்கு தான். அதை வைத்து தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வருத்திக் கொள்வதும் என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கடவுள் வியாபாரமாக்கப்பட்டதும் அரசியலாக்கப்பட்டதும் அதை விட வேதனைக்குரியது. ஆனால், இங்கே ஒருவர் தனக்கும் தன் மனைவிக்கும் ஆசையான ஒன்றிற்காக அலைந்து திரிந்து கடைசியில் நம்பிக்கையை மட்டுமே வைத்திருக்கும்போது. அந்த நம்பிக்கை கடவுளாக இருப்பதில் தவறில்லை என்றே பட்டது. 


"ஆமா, ரொம்ப சக்தி வாய்ந்த சாமின்னு தான் எங்க வீட்ல எல்லாரும் வந்துருக்காங்க.." அவர் முகத்தில் அப்படியொரு பிரகாசம். "உங்களுக்கு கண்டிப்பா சீக்கிரம் கொழந்தை பொறக்கும்.." என்றேன் சிரித்த முகத்தோடு. அவர் முகத்திலும் அதே சிரிப்பு.



இந்த சம்பவம்  முடிந்த சிறிது நேரத்தில் எனக்கு தோன்றியது. 'அடடா, நாம நம்பாத ஒரு விஷயத்த நம்பற மாரி சொல்லிட்டோமே' என்று தான். ஆனால், அவர் நம்பிக்கையை குலைக்காமல் இருக்க இப்படி செய்தது திருப்தியாக தான் இருந்தது. அதே சமயம், ஒரு தெரியாத நபர் என்பதால் நின்று யோசித்த நான், நெருக்கமானவர்களின் நம்பிக்கையை கண்டிப்பாக உதாசீனப்படுத்தி இருப்பேன்.நாம் எடுத்துக்கொள்ளும் உரிமைகளுக்கு இடையில் நம்பிக்கைகளுக்கு இடமில்லை போலும்.


இதெல்லாம் சரி, கடவுள் இருக்காரா இல்லையானு சொல்லு என்கிறீர்களா?



இன்னுமா உங்களுக்கு புரியவில்லை. கடவுள் ஒரு நம்பிக்கை கொடுப்பவர் தான். இந்த கதையில் நம்பிக்கை கொடுத்த நான் தான் கடவுள் - அஹம் ப்ரம்மாஸ்மி!

“What is it with him? He won’t reply to messages. He won’t attend calls regularly and won’t even bother calling us back. But, he wants to send postcards as if he is a social animal.”


This is what so many people who know me well would have thought  when I said I wanted to send postcards to people I know. Even I would have thought the same if I were in their place. Thanks to the social quadrant of my mind. It always works weirdly. It was just a little trigger that made me write those postcards. I am hoping to write more, let that be. We should travel a little while back to 2019 to understand a bit more about the trigger.


2019 was kind of a revelation for me. Two major things happened in my life. One, I joined my current organisation and the other, as I already gloated enough, I did my first himalayan trek. Apart from the economical, physical and all other million aspects of those two things, meeting the people that I know today would have to be the collection of moments that tilted my world to a better direction. Both things had an equal impact in the birth of these postcards.


The people I met in my organisation taught me the importance of empathy and consent. If not for them, I would have sent the same postcards to the people without asking them if they even wanted to receive one. My intention could have been to surprise them. But, may be that could not have been received well. All surprises are not good surprises. Well, for the empathy part, I was thinking about how the postcard could brighten up them even if it is for a few minutes when I was writing them. Imagine yourself being in a random place either a foreign land, a relative’s home or wherever and surrounded by too many random people whom you couldn’t get along with. Suddenly you meet a person who calls you by your name and talks with you for a few seconds even if it’s some customary exchange. He/She may be an acquaintance, a friend or a ‘I met you somewhere’ person. But, it will ease you up for a while right? At least I will feel so. I wanted to bring the same feeling to the people to whom I send those postcards. Again, this was only a chain reaction of the trigger that I was talking about.


Now coming to the main trigger, I have talked and wrote a lot about my himalayan trek. So, I am not going to bore you with those details again. But that was when I met Pranav. He was our trek leader. His motivation was one major factor that made me and even some of my fellow trekkers to complete the trek. He was jovial, inspiring and a lot more for one to look up to. At the end of our trek, he gave each of us two postcards and told us to write it to him or friends as per our wish. He was a lover of personalised notes as he quoted that he would even print some of the text messages and paste it in a notebook if it meant to him. I did send a personalised note to him but on whatsapp. I completely forgot about the postcards and I was not even in touch with him frequently.


Fast forwarding to October 2021, I received the news of his death while trekking somewhere in Maharastra. I couldn’t digest it and hoped it to be a rumour and would be some other Pranav. It wasn’t. I felt bad for a couple of days and moved on. This is what I don’t like with all deaths - we all become helpless and would not be able to do anything else to change the situation. But again, that’s what a life is. Even then I never remembered anything about the postcards.


December 2021, when I was packing for my recent trip, I wanted to reuse some of the items that I bought in 2019. That’s when I found those postcards. And that was the trigger. I had a little breakdown of sorts. I really don’t know what was that about whether it was Pranav’s death, the inevitable uncertainty or whatever. That’s when I decided I should send some postcards to people who would want it. People, who are close to me, know that I am a sucker for handwritten notes and I used to send letters sometime back. So, in a way, it was my homecoming.



After my trip, the same idea turned out to be printing the postcards with the photos that I have taken to give some more personalised touch. Still there might be questions about this whether it is a remembrance of Pranav, it is an initiative to encourage writing, it is to show my kindness or something else. Honestly, I don’t know. It is yours to interpret. But I can say that I am selfish enough to brag about the smiles that I brought to a few people through the postcards (from the responses that I got). In a world full of uncertainties, I wanted to be that one happy uncertainty even if it lasts for a few seconds. That’s what I think.

"ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணை தான் ஞானத்தின் எல்லை..."

என்று வைரமுத்துவின் வரிகள் சோகக் குரலில் ஒலித்துக் கொண்டிருக்க, மின் மயானம் முழுவதும் அழுகைக் குரல்கள் நிறைந்திருந்தன. அதில் ஒருவனின் ஓலக்குரல் மட்டும் தனியாக ஒலித்துக் கொண்டிருந்தது. இறந்து போன சிவகாமி பாட்டியின் பேரன் ராகவ் மூச்சடைக்க விசும்பிக் கொண்டிருந்தான். பிறக்கும்போது இவனை அள்ளி அணைத்த கைகள், அனலின் கைகளுக்கு இரையாவதை பார்த்த பின் எப்போதும் கட்டுக்குள் இருக்கும் இவன் உணர்ச்சிகள் அணைகளை உடைத்துக் கொண்டு வெளி வர ஆரம்பித்திருந்தன.  பாட்டியின் இழப்பு இவனை இவ்வளவு திருப்பிப் போடும் என ஒரு போதும் நினைத்திருக்கவில்லை. அவர் இழப்பைப் பற்றியே யோசித்திராவனுக்கு இது ஒரு மீளாத்துயரமாக தான் பட்டது. இவன் மட்டுமல்ல வேறு எவரும் யோசித்திருக்க மாட்டார்கள். காலையில் கோவிலுக்கு சென்று வருகிறேன் என கிளம்பி, மாலையில் சாமியாக வந்த சிவகாமி பாட்டி தந்த ஏமாற்றம் அனைவருக்கும் பேரதிர்ச்சி தான்.

அக்கண்ணீரின் இடைவெளிகளில் தன் சிந்தை எங்கிருக்கிறதென்று அறியாதவனாய் அனைவரையும் நோட்டம் விட ஆரம்பித்திருந்தான். இவர் இடத்தில் இனி யாரும் இல்லையே என்ற பாசத்தில் சிலரும், இன்று இவர் இருக்கும் இடத்திற்கு நாளை நாமோ என்ற பயத்தில் சிலரும் அழுது கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கப் பார்க்க இவனுக்கு கோபம் தலைக்கேறியது, தன் மீதும் கூட.  சிவகாமி பாட்டி உயிருடன் இருக்கும்போது  வசை பாட வாய்கள் போதாமல் பேசியவர்கள் பலரும், கவலை முகமாய் கண்ணீருடன் நின்றிருந்தனர்.  அவர்களைக் கேள்வி கேட்க முடியாத விரக்தியில் தன் மீதும் எரிச்சலாய் வந்தது. கோபத்தின் உச்சத்தில் இறந்த கால நினைவுகளை அசை போட ஆரம்பித்தான்.

பரந்து விரிந்த வானை அலங்கரிக்கும் நிலா போல நெற்றியில் பொட்டும், அவிழ்க்க முடியாத ஜிலேபி கொண்டையும், தவிர்க்க முடியாத புன்னகையும் தான் சிவகாமி பாட்டியின் அடையாளங்கள். இளையவர்கள் எது செய்தாலும் பாக்கைக் கொட்டிக் கொண்டு குற்றம் சொல்லும் சாதாரண பாட்டி அல்ல சிவகாமி, அவர்கள் செய்யும் லூட்டிகளில் தன்னையும் இணைத்துக்கொண்டு மகிழும் முதிர்ந்த இளரத்தம். ராகவ் எடுக்கும் செல்பிக்களுக்கு போஸ் கொடுப்பதாகட்டும், இளையதளபதி விஜய் படத்தை இமை கொட்டாமல் பார்ப்பதாகட்டும், 'ஊதா கலரு ரிப்பன் ' பாடலை முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்வதாகட்டும், ராகவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களை கலாய்ப்பதாகட்டும்  தனக்கான இலக்கணத்தை தானே வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதே சமயம் ராகவிற்கு பழைய உறவுகளின் கதைகளையும் அவர்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சந்தர்ப்பங்களையும் அவர் தவற விடவில்லை.

ராகவுடன் அவருடைய உறவு மிகவும் விசேஷமானது. மகன் வழிப் பேரன் என்பதாலோ என்னவோ இட ஒதுக்கீட்டில் இருக்கும் ஓர வஞ்சனை போல மற்ற பேரப் பிள்ளைகளை விட இவனிடம் பாசம் அதிகம். ராகவ் தன் அம்மாவுடனோ அப்பவுடனோ சண்டை இடும் போதெல்லாம் சிவகாமி பாட்டியிடம் போய் படுத்துக் கொள்வான். காரணம், தவறியும் சிவகாமி பாட்டி ராகவை திட்டி விட மாட்டார். குழந்தையில் இருந்து அவனை தூக்கி வளர்த்ததால், அவன் ஒவ்வொரு அசைவும் பாட்டிக்கு அத்துப்படி.  அவன் கோபம் தீரும் வரை அவனிடம் கதைகளைக் கேட்டுக் கொண்டு, தலையை நீவி தூங்க வைத்து விடுவார். அடுத்த தினமே "சின்ன பையன் அவன் என்ன பண்ணிட்டான்னு அவன திட்டிருக்க ?" என்று ராகவின் அப்பாவிடம் சண்டையிடுவார்.

முகப்புத்தகத்தின் குறுக்கீடு இல்லாமல் பிறந்தநாட்களை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பாட்டி படுசுட்டி.பிறந்த தினம் விசேஷ தினங்களில் ராகவ் தவறாமல் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் பணமும் வாங்கி விடுவான்.  அவன் வரவில்லையென்றாலும் பாட்டியின் ஆசிர்வாதமும் பணமும் அவனை தேடி வந்துவிடும்.

வீட்டில் துணி எடுக்க அனைவரும் செல்லும்போதெல்லாம், பாட்டி ராகவ் தேர்ந்தெடுக்கும் சேலைகளை தான் வாங்குவாள். இவன் தேர்ந்தெடுக்க சிரமப்பட்டால் "ஏண்டா, உங்கம்மாளுக்குனா அவ்ளோ சீக்கிரம் செலக்ட் பண்ற, எனக்கு பண்ணமாட்டியா ?" என்று நக்கலடிப்பார். அதே சமயம் அவன் சுமாராக தேர்ந்தெடுத்தாலும் ,"என் பேராண்டி செலெக்ஷன் எப்போவும் சூப்பரா தான் இருக்கும் " என்று அனைவரிடமும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்.

அப்படி சேலை உடுத்தி மகிழ்ந்த உடலை அவருக்குப் பிடித்த ப்ளூ கலர் பட்டுப்புடவையுடனே அனலுக்கு இரையாகக் கொடுத்து விட்டோமே என்று எண்ணிய போது, ராகவிற்கு அழுகை இன்னும் குமுறிக்கொண்டு வந்தது. அவர் எப்படி இறந்தார் என தெரியாத விரக்தியில் அழுகை இன்னும் அதிகமானது. எப்படியேனும் அதை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்ததாக உணர்ந்தான்.

அது ஒரு புரட்டாசி சனிக்கிழமை. ராகவின் அம்மா அவனை சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு அழைத்து செல்ல ஒரு பட்டியலே தயார் செய்து வைத்திருந்தார். ராகவ் காலை எழுந்திருக்கும்போதே சிவகாமி பாட்டி தலைக்கு குளித்து துவட்டிக் கொண்டிருந்தார்.

இவனைப் பார்த்தவுடன் "நீ கோயிலுக்கே போகமாட்டேனு இருந்த, இன்னைக்கு பாரு... உங்க அம்மா உன்ன எத்தன கோயிலுக்கு கூட்டிட்டுப் போக போறான்னு...  ஆனா நா தப்பிச்சுட்டேன் பா..  இங்க பக்கத்துல இருக்கற கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து படுத்துக்க போறேன் "  என்றார் கிண்டலாக. அவனும் அதைக் கேட்டு மீண்டும் உறங்க சென்றுவிட்டான்.

சிறிது நேரம் கழித்து எழுந்தவுடன் "பாட்டி எங்கயோ கீழ விழுந்துட்டாங்களாம்... இந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்துரு" என்று ராகவின் அப்பா அவனிடம் சொன்ன போது கூட அவனுக்கு பாட்டி உடல்நிலையின் தீவிரம் அவனுக்கு புரியவில்லை. அங்கு சென்று பாட்டியின் நிலைமை சீராகிக் கொண்டிருக்கிறது என்று அனைவரும் பெருமூச்சு விடுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. சர்க்கரையும் மாரடைப்பும் அவரை முடித்துவிட்டது.

வீட்டிற்கும் ஹாஸ்பிட்டலுக்கும் இடையில் நடந்தவை அனைவருக்கும் புதிர் தான். அதை விடுவிக்க ராகவ் கோவிலுக்கு அருகில் சென்று விசாரிக்கப் போனான். ஒவ்வொருவரிடமும் அவன் கேள்வி கேட்கும்போதும் அவர்கள் சொல்லும் பதிலில் தன் பாட்டியே கிடைத்து விடுவாரோ என்ற ஆர்வம் அவன் கண்களில் தெறித்தது கண்ணீருடன் சேர்ந்து. இறுதியில் அவன் அறிந்த சம்பவம் அவனை சற்று பலவீனமாக்கியது உண்மை தான்.

பாட்டி கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஒரு சிற்றுந்தில் ஏற வேண்டும். அதற்கு செல்லும்வழியில் பாட்டிக்கு தலைசுற்றல் ஆரம்பமாகியுள்ளது. ஒரு வழியாக பேருந்தில் ஏறியவருக்கு உட்கார இடமில்லை. கம்பியைப் பிடித்து நிற்க முயற்சித்த பாட்டிக்கு தோல்வியே கிட்டியது. தன் முகத்தைப் பேருந்தின் தரைக்கு தந்தார். தன்னையும் அப்போது வந்த முதல் மாரடைப்புக்கு இரையாக. அந்த பேருந்தின் நடத்துநர் சொல்ல சொல்ல ராகவின் கண்கள் குளமாகியது. இதை வீட்டில் சொல்ல முடியாமல் சொல்லி கதறினான்.

அதன் பிறகு, அவன் பேருந்தில் செல்லும்போதெல்லாம் பாட்டியின் ஞாபகங்கள் ஒரு முறையாவது அவனை தீண்டிவிடும். விளைவு, பாட்டியின் வயதில் எவர் வந்தாலும் அவர்களுக்கு உட்கார இடம் கொடுக்க ஆரம்பித்தான்.

அவர்களின் கண்களிலும் புன்னகையிலும் சிவகாமி பாட்டி வாழ்கிறார் என்கிற நம்பிக்கை அவனை முழுதும் ஆட்கொண்டது.

'This drama is never going to end'. Varun thought as he was sitting in a girl's home for the bride seeing ceremony. That was not the first one but his insight alarmed 'This is not going to be the last one as well'.

The memories of his ex-girlfriend Vidhya always haunted him. But his parents never had a chance to understand his relationship with Vidhya which was a prey to the religious intolerance of the society. He stood against Vidhya's parents for her, just to watch the emotional blackmail drama taking her away from him. Neither did he find any reason to hate Vidhya nor to love any other girl.

It took 6 months for his parents to convince him for a marriage after that tragedy which was known to none. But he was never convinced to like any of the 8 girls which his parents managed to show him through matrimony's impulsion.


When he was waiting for this bride, he was served with hot tea and spicy samosas by few aunties who were subscribed to a complete makeup package from a beauty parlor. 'What if it is a genetic defect?'. That very thought scared him more to meet the bride.


At last he got a glimpse of the bride 'Sneha' who was coming down through the stairs. She was wearing a pink saree, yet managed to avoid a too girly look. She kept her makeup as simple as possible to give Varun a sigh of relief. She was coming towards the couch where Varun's family was sitting with a vibrant smile. Suddenly everyone heard a wail. Without a second thought,  Sneha ran towards the child who was weeping as he fell down from the stairs. That was a heroic moment for Sneha which gained a place in Varun's heart. It was not a great deed but it rewinded back the memories of his Vidhya who loved Kids.


After a while, Varun and Sneha met in balcony to complete the formality of bride seeing ceremony. Varun's silence spoke while Sneha's words revealed clarity. Her thoughts impressed him to an extent.


At the end of their short meet. "So All good between us?", Sneha Pouted.

"Probably..." said Varun with a grin.


3 months later. A fiberboard in front of a church in Chennai read 'Sneha Thomas Weds Varun Paul'.

Sneha was dressed in white like an angel and Varun was wearing a black branded blazer with crisp grooming. The moment he saw his marriage poster, memories started to flow and so did tears from his eyes. He thought of his days with Vidhya when he designed few invitations in their name. He always thought the common starting letter of their names did enough magic to create a great invitation in turn a great couple too. It was a teary eyed wedding for Varun while it was an exciting day for Sneha who entered the marriage life with higher expectations and dreams.

A week after their marriage, the couple moved to an apartment in Bangalore which was their work town. That was one of the main reasons for matrimony to bring them together. But it stopped right there.  

Varun's silence for Sneha seemed normally abnormal before marriage and became abnormally normal after marriage. They both stayed in the same apartment as more of roommates than husband and wife. Sneha could reach her office only through bus even if it was on the way to Varun's office. Her feelings for Varun never changed as she believed that someday she could get a glimpse of Varun's love. Prayer in church and purchase of provisions defined their moments of togetherness in their 3 month marital life.

The balcony in their bedroom gave what Varun couldn't. It was her dreamland which gave the hope of pure love and affection. She spent most of her home time in the balcony calling her parents and friends whenever she felt down. If it was pillows for most of us, it was that balcony for Sneha where her eyes would convey most of the untold stories. That balcony became her habit to avoid the embarrassing silence between Varun and her in the bedroom. She always made sure to come back only after Varun's entry into deep sleep.

It was a fine Wednesday morning. Sneha took off that day as she was sick. Sneha was having a chat with the neighbour along with a coffee while Varun was searching something furiously in the bedroom. That irritated Varun more and he shouted her name aloud.


"Sneha!!!"

Sneha was too happy that Varun called her name and ran towards the bedroom with the coffee cup in hand.

"Yes Varun..." said Sneha marking her presence with a brighter face.

"Did you see my wallet anywhere?"

"No, I didn't see it.. Where did you keep it last night?"


"Oh... You are so cool that enjoying your coffee and asking me the questions. Can't you even search it for me? Such an irresponsible idiot. Is this why I got married you for?" shouted Varun and went on to hurt Sneha more. Coffee cup in Sneha's hand and Sneha herself broke at the same time after exposed his other side. The anger behind his calmness was terrible. She started to weep and gave her face to the pillows. Varun left after cursing himself for marrying her and his irritation purely targeted Sneha leaving his missing wallet somewhere. The neighbour came to her rescue but her tears got too comfortable well before. At the same time, Varun found his wallet showing its teeth in the backseat of his car.

Varun's guiltiness clogged his guts to call and console Sneha. So he decided to follow an universal idea which he robbed from a girl ordering something in flipkart when he entered his office. He had decided to get his wife a dress as a disciple of husbands all over the globe. It might have sounded a bit weird as a human but the male chauvinist in Varun urged him to wipe his wife's tears with a gift. That was the same day when his office offered him a chance to take his wife to a star hotel for the weekend grand gala dinner arranged for all the employees.

On Friday Evening, when Sneha was returning from the office, their bed held a yellow salwar along with a note which read 'Get ready soon. We are going out for a dinner'. That moved Sneha altogether into a different world that she never thought to mind her hatred for yellow color. Her happiness was so huge that even the extra large salwar couldn't hold it. She felt so comfortable in that uncomfortable dress.  

They reached the dinner place well before time. Varun introduced her to all his teammates and their wives. Everyone was in praise for Varun's love and commitment towards work. Sneha felt bad for not creating an impact in Varun's life as work did. Soon after the introduction session, Varun went with his colleagues to get some booze after telling Sneha not to wait for dinner and to have it with his teammate's wives. Varun was in no mood to get completely drunk but just a few shots of vodka. Alcohol never allows humans to control just like the desires. It ignited thoughts of Varun's old days which in turn made Varun to drink as much as he could. He was not in his senses and forgot Sneha's existence. He went straight up to the car and drove home.

Sneha was waiting impatiently after a hurried half tummy dinner.


"Are you still waiting here? I thought you went already.." said Ram, one of Varun's Colleagues, as he saw Sneha waiting for a considerable time.

"No... I was waiting for Varun to come.."

"Sorry.. He went already.. I guess he forgot you.."


Shock and anger sandwiched Sneha as she heard those words from him. But she somehow managed to avoid exposing it in her face.

"Oh Sorry.. Seems like he already messaged me to come home.. I didn't notice.. No problems.. I will go home" she said after checking an unsent and unreceived message in her mobile. She started towards the main road before Ram could reply anything. Her heart cried to shout at Varun but her continuous calls never seemed to bother him. She didn't have any money that can take her home.

She decided to get a taxi and pay after reaching the home. Tears rolled on her cheeks. She hated herself for being so unlucky. Her apartment security helped her to pay for the taxi. When she reached her home, Varun was sleeping in the couch with an ever disturbing snore. As usual, she gave all her feelings and herself to the bed.

Next morning, she bursted out in anger to Varun for the first time.


"Did I ask you to take me out? How careless you are... What if something happened to me?"

"Nothing happened right. Why do you want make it a big deal?" said Varun with an utmost carelessness.

"Why did you marry me if you don't like?... Am I a doll without any feelings?"

"See.. even I don't know why the hell I married you.. You can leave this home whenever you want"


She realised that it would not make any sense to talk about that to him. At Least the walls would have listened to her more than him. She didn't want to disturb her parents either. She cursed herself and decided to let things go on and not to care more about that.

Months passed. Things got a bit normal. It was ethnic day in Sneha's office. She made her mind to wear saree on that day after a series of compulsion from her colleagues. She was not a regular saree wearer. So she felt it would be difficult to travel in bus with saree and decided to take her colleague's help in conveyance. But it was fate which again took up the honour of deciding things in her life. In the morning, she went with her colleague to office. Due to some reason, her colleague had to leave in the afternoon itself. She decided to give it a try to call Varun and tell him to pick her up in his way.


"Varun... Can you please come and pick me while going home?"

"No.. I will be late. You take a bus and go to home.."

"No Varun.. I am in Saree.. It will be difficult for me to go in bus"

"Or take a cab and go... I am very busy now.."

"But Varun please...."

"Can't you get What I am saying? I am really busy.."


"Sorr.." The call was disconnected before she could complete her sorry. After yielding a yet another break in her broken heart, she decided to take a cab. But she had to cross the road to take the cab. Her eyes were on the signal but her mind wasn't. She started to cross the road and reached halfway mark. Before her eyes could send a message to her mind that signal turned red, the place where she landed turned red as a car swiftly crossed the place ignoring her presence. She was losing her consciousness. Someone took her mobile to call recently dialed number which was Varun. Varun thought Sneha was calling again to disturb him and disconnected the call twice without any hesitation.

"There is some number called Varun and he is disconnecting the call. Let me try some other number.." said the stranger who had her mobile. In the meantime, she went into unconscious state. So did her feelings for Varun.

Message had been passed to all relatives who had started to Bangalore from Chennai immediately. When Varun heard the news,he rushed to the hospital with a heavy heart and saw doctors treating Sneha in ICU. He hated himself for hurting Sneha both mentally and physically. He felt himself to be the reason for Sneha's accident. A man with stone heart got stoned. Even tears refused to show up to support his feelings. He stayed all night in the hospital to see all his relatives and Sneha's parents reaching to ensure the health condition of Sneha. He felt lonely in the crowd.

After two days, when Sneha was back to consciousness, he was sitting in that room alone. She saw him and started to cry in fear.

"I am very afraid... Can you please take me to my mom?  I don't want to be here. I want my mom.."

Sneha's fear scared Varun more as he made himself a dangerous creature in her life. He left the room and went directly to the church. None had seen him with so much of tears in his eyes except for walls of the church. Each drop of his tears fell down to raise his feelings for Sneha. For the first time, he realised his love for Sneha. He confessed in church for the sins he did to Sneha which didn't deserve to be forgiven. At last, he confessed to his father who was more of a friend which he ensured in yet another situation.

"This is not a chance... This is her rebirth and yours too.. Go get hold of her and show your love.. Start your new life..."

After her discharge from hospital, most of her time was with her mother. He slept alone in his room with tears conversing to pillow. Even after her mother left, Sneha was staying in second bedroom and never wanted to come back to their room.

One breezy night, he entered her room with a urge to express his feelings. His shadow at the doorstep was enough to make her turn to other side. He knelt down near the bed and started in a hope that she would be hearing.

"Sneha... You always had a question.. Why should I marry you if I don't like you? Even I don't have answer for that seriously... I was in a relationship and when that failed I hated to think any girl in that position. But when I saw you, my heart told me that you can be a cure. I accepted you with a gut feel that you could be a good wife to me and you were...."

His voice stammered. "But I failed to analyze whether I could be a good husband to you... Yes,I was selfish.. I could not give my love to you... To be clear.. I never tried to do that. Now I realize the mental torture I given to you... I know it is an unforgivable sin.. But I want you to accept me and forgive me for the sake of my love... For one last time, you have to bear my selfishness and let me to show my love to you.."

Sneha was unmoved and lying in the same position without any reaction. He stood up and saw her in deep sleep with earplugs on. Again he knelt down on the floor and stared at the ceiling.

In the morning, when Sneha woke up, she was surprised to see Varun kneeling down and sleeping with his head on the bed. She woke him up.

"Why are you sleeping here?"

"I was telling you my past last night which you never wanted to hear. Let it be... You were already my better half. Will you take me as yours?"

She saw the pure love for the first time in Varun's teary red eyes which she was longing for. She hugged him to get hold of it. No words had been spilled in the room after that. It was love and tears which conveyed everything.
இரவு 9:30 மணி

யுவன் இசையைப் போன்ற எனெர்ஜியும், ஸ்ரீ காந்த் தேவா வின் இசையைப் போன்ற இரைச்சலும் ஒரு சேர நிறைந்த  பெங்களுரு பேருந்து நிலையத்தில் சத்யா தன் தோழியின் அண்ணன் அமுதனுடன் எலெக்ட்ரானிக் சிட்டி செல்லும் பேருந்தைத் தேடிக் கொண்டிருந்தாள். அதற்கு போகும் வழியில் தான் சத்யாவின் ஹாஸ்டலும் கூட.

ஒரு தோழியின் திருமணத்திற்காக வந்திருந்த அமுதனை விருந்தோம்ப வேண்டிய சூழல் சத்யாவிற்கு, அதை அவனை சேலத்திற்கு பேருந்து ஏற்றி விடும் வரையில் கடமையாய் செய்து முடிக்க சபதம் ஏற்றிருந்தாள். அதற்காக ஹீரோயினை பத்திரமாக பஸ் ஏற்றி விடும் ஹீரோவாக தன்னை பாவித்துக்கொண்டு, தன்னை பற்றி தானே எண்ணி புளங்காகிதம் அடைந்து கொண்டிருந்தாள்.

திருமண வரவேற்பு முடிந்து மணமகன்- மணப்பெண் இருவரின் மேக்கப்புகளுமே கலைந்து போயிருக்கக் கூடிய அவ்வேளையிலும், மாலையில் தான் போட்ட மேக்கப் சிறிதளவும் சிதையாதவாறு பத்திரமாக பார்த்துக் கொண்டாள் சத்யா. அதற்கு உடந்தையாக அவள் பர்ஸில் குடிகொண்டிருந்த சீப்பும் கண்ணாடியும் ஒத்துழைத்தது. ஹோட்டல் கமிஷனுக்காக ஆள் புடிக்கக் காத்திருந்த ஆட்டோக்காரர்களும் இவளைப் பார்த்து கன்னடத்தில்  கூவ ஆரம்பித்தனர்.

"மேடம்... தங்க ஹோட்டல் வேணுமா ?" 

"ஆட்டோ , ஆட்டோ... ஒரு 20 ரூபா குடுங்க.. நல்ல ஹோட்டலா நா கூட்டிட்டு போறேன்... நீங்களா போனா ஏமாத்திருவாங்க ..."

என்று பல குரல்கள் இவளை ஒரு சுற்றுலா பயணியாக எண்ணி ஹோட்டலில் தங்க வைக்க ஓலமிட்டுக் கொண்டிருந்தன. ஆனால், எதையும் சட்டை செய்யாமல் எலெக்ட்ரானிக் சிட்டி பஸ் இருக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

'அடேய்... எங்க ஆபீஸ்ல பேசற இங்கிலிஷே அரைகுறை, இதுல உங்க கன்னடம் வேறயா... சும்மா போங்கடா !' என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள். மைன்ட் வாய்ஸ் வெளியே கேட்டாலும் தமிழில் கேட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில். இருக்கும் இடம் கர்நாடகம் அல்லவா!

ஒரு வழியாக அவள் தேடிக் கொண்டிருந்த பேருந்து கிளம்ப தயாராக இருந்தது மட்டுமல்லாமல் , இவர்கள் இருவரும் அமர இரு சீட்கள் தரும் அளவிற்கு கருணையும் கொண்டிருந்தது.  பேருந்தில் வேறு சீட் எதுவும் காலியாக இல்லை, ஒரு பெண் ஏறினாலும் சீட் பறி போகும் அபாயத்தில் அமுதன், எப்போது வேண்டுமானாலும் தூங்கி விழும் பரிதாபத்தில் சத்யா என்ற நிலையில் பேருந்து கிளம்பியது.

"எலெக்ட்ரானிக் சிட்டி போகவே 1 மணி நேரம் ஆகும். அப்புறம் நா பஸ் ஏறி , நீ திரும்ப ஹாஸ்டலுக்கு அரை மணி நேரம் நடந்து வரணும். உனக்கு ரொம்ப லேட் ஆயிரும் சத்யா..." என்றான் பரிச்சயமில்லாத பாஷைக்கிடையில்  படாத பாடு பட்டுக் கொண்டிருந்த அமுதன்.

"அரை மணி நேரம் எல்லாம் ஆகாது ணா... சீக்கிரம் போயிடுவேன் உங்கள பஸ் ஏத்தி விட்டுட்டு..." என்றாள் தன் ஹீரோயிசத்தை காட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சத்யா.

"இல்ல பரவாயில்ல...  நா பஸ் ஏறிக்கறேன்.. நீ உங்க ஹாஸ்டல் ஸ்டாப்லயே  இறங்கிடு.."

"இல்ல ணா... ஒரு ஸ்டாப் தானே... உங்கள ஏத்தி விட்டுட்டு நா ஹாஸ்டல் போயிக்கறேன் " என்றாள் சக்திமானாக தன்னை நினைத்துக் கொண்ட சத்யா. அமுதனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

தனக்கு மனப்பாடமாக தெரிந்த கன்னட டயலாக்கில் டிக்கெட்டை எடுத்துவிட்டு ஜன்னலோரத்தில் தன் தலையை  சாய்த்தாள். தூக்கம் தூரத்தில் வருவது போல தோன்றியது. இருந்தாலும் தன் கண் மை அழிந்து விடக்கூடாதென்று கண்ணியமாக அதை துரத்திவிட்டாள்.

அப்போது ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றது. நடுத்தர வயதில் இருவர் ஏறினர். ஒருவர் மாற்று திறனாளி , மிகவும் சிரமப்பட்டு தான் பேருந்தில் ஏறினார்.  சீட் இல்லாததால் ஒரு கம்பியைப் பார்த்து சாய்ந்து நின்று கொண்டார். ஹெட்போன்களிலும் மொபைல்களிலும் மூழ்கிப் போயிருந்த பயணிகளுக்கு இவரை கவனிக்க நேரம் இல்லாமல் தான் போனது.

எதார்த்தமாக அவரைப் பார்த்த சத்யா, தன் சீட்டை விட்டு உடனே எழுந்தாள். அவருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன், உட்கார்ந்திருந்தால் தூங்கி விடுவேன் என்ற எண்ணமும் சேர்ந்து அவருக்கு சீட் கொடுக்க செய்தது. எந்த மொழியில் பேசுவது என புரியாமல் ஆங்கிலத்தில் ஒருவாறு பேசி அவரை உட்கார வைத்தாள். முதலில் மறுத்தாலும், அன்பு தொனித்த அவள் குரல் அவரை உட்கார வைத்தது. அவளுக்கு மனமார நன்றி கூறிக்கொண்டார்.

இவள் நின்ற சிறிது நேரத்தில் அமுதனும் இன்னொருவருக்கு இடத்தைக் கொடுத்து விட்டு நின்றுகொண்டான்.  இருவரும்  சுவாரஸ்யமற்ற விஷயங்களை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே வந்தனர். சத்யா இடம் கொடுத்தவர் மட்டும் அவ்வப்போது சத்யாவை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

எலெக்ட்ரானிக் சிட்டி ஸ்டாப் வந்தது. அமுதனும் சத்யாவும் இறங்கினர். அதே இடத்தில் அவரும் இறங்கினார். என்றும் இல்லாமல் அன்று இறங்கிய சிறிது நேரத்திலேயே பஸ் வந்தது. அமுதனை அதில் ஏற்றிவிட்டு தன் கடமையை முடித்த சத்யா, மனம் முழுக்க திருப்தியுடனும் முகம் முழுக்க தூக்கத்துடனும் தன் ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்து சுமார் 1.5 கி மீ தொலைவில் இருந்தது அவள் ஹாஸ்டல்.

சிறிது தூரம் நடந்தவளுக்கு திடீரென அவளை யாரோ பின் தொடர்வது போன்ற எண்ணம் ஏற்பட்டது. திரும்பி பார்த்த அவளுக்கு பேரதிர்ச்சி. அவள் இடம் கொடுத்த அந்த நடுத்தர வயது நபர் அவளுக்கு 10 மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தார்.

'என்னடா இது ? இடம் கொடுத்தது ஒரு தப்பா... எதுக்கு என்ன பாலோ பண்றாரு ' என்ற குழப்பத்தை மனதில் வைத்துக் கொண்டு, அவரைப் பார்த்து புன்னகையை படரவிட்டாள்.

(ஆங்கிலத்தில் )

"என்ன இவ்ளோ நேரம் கழிச்சு தனியா போயிட்ருக்கிங்க ?" என்றார் அந்த நபர் அதே புன்முறுவலோடு.

"ஆமாங்க... ஒரு பிரெண்டோட கல்யாணம் .. அதுக்கு போயிட்டு வர லேட்டாயிடுச்சு... "

"ஓ.. சரி சரி ... கொஞ்சம் சீக்கிரமா வந்துருக்கலாம்.. இந்த ஊர் கொஞ்சம் சேப் இல்ல இந்த டைம்ல "

'ஐயையோ.. இவர் முதல்ல எதுக்கு வரார்னு தெரிலையே..' என்று எண்ணியவாறு "உங்க வீடும் இந்த பக்கம் தானா ?" என்றாள் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள எண்ணிய சத்யா.

"இல்ல இல்ல.. என் வீடு அந்த பஸ் ஸ்டாப் பக்கம் தான்.. நீங்க தனிய போறிங்களே னு தான் பின்னாடி வந்தேன்"

"ஐயோ... அதெல்லாம் பரவாயில்ல ... நான் போயிக்கறேன்... நீங்க ஏன் கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வரிங்க ?"

"நா கூட வர்றது தெரிஞ்சாலே நீங்க பயப்படுவிங்க னு தெரியும்... அதனால தான் உங்களுக்கே தெரியாம வரலாம்னு பாத்தேன். ஆனா நீங்க என்ன பாத்துட்டிங்க " என்றார் கள்ளம் கபடம் இல்லாத புன்னகையோடு.

"இல்ல... நா இந்த டைம்ல நெறைய தடவ போயிருக்கேன் .. ஏதும் பிரச்சனை இல்ல.. நீங்க வீட்டுக்கு போங்க.."

"இல்ல மா... நா உங்க கூட வரது உங்க சேப்டிக்காகனு மட்டும் சொல்லிட முடியாது...  எனக்காக இடம் குடுத்த நீங்க , பத்தரமா வீட்டுக்கு போயிட்டீங்கனு தெரிஞ்சா ஒரு திருப்தி அவ்ளோ தான் . அதுவும் இல்லாம உங்கள பாத்து என் சிஸ்டர் ஞாபகம் வந்துருச்சு"

சினிமாத்தனமாக இருந்தாலும் அவர் கூறிய வார்த்தைகளில் இருந்த நேர்மை அவளை ஏதோ செய்தது. இவரையா இவ்ளோ நேரம் சந்தேகப்பட்டோம் எனக் குறுகினாள்.

அவ்வளவு நேரம் யாரோவாக இருந்த அவர், அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தால் இப்படி தான் இருந்திருப்பாரோ என்று அவளை எண்ண வைத்தார். "அண்ணா ..." என்று அழைக்க ஆரம்பித்தாள்.

மீதியிருந்த 1 கிமீ தூரமும் மனிதமும் அன்பும் நிறைந்த பாதையாக மாறியது.